Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 01, 2011

கடலூரில் கண்காணிப்பு கேமரா பொருத்தம்

கடலூர் : கடலூர் நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது. கடலூரில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், கூட்ட நெரிசலில் நடக்கும் குற்றங்களைத் தடுக்கவும் நகரின் முக்கிய சாலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என எஸ்.பி., பகலவன் அறிவித்தார். கடலூர் ஆல்பேட்டை, கலெக்டர் பங்களா, செம்மண்டலம், கலெக்டர் அலுவலக சாலை சந்திப்பு, உட்லண்ட்ஸ் ஓட்டல் நான்கு முனை சந்திப்பு, பெரியார் சிலை சந்திப்பு, லாரன்ஸ் ரோடு ஆஞ்சநேயர் கோவில் சந்திப்பு சிக்னல், வண்டிப்பாளையம் ரோடு சந்திப்பு, திருவந்திபுரம், கடலூர் - சிதம்பரம் சாலையில் ரயில்வே மேம்பால சந்திப்பு ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக வண்டிப்பாளையம் ரோடு சந்திப்பில் நான்கு பக்கமும் கண்காணிப்பு கேமரா சோதனை ஓட்டமாக பொருத்தப்பட்டுள்ளது. கேமராவின் செயல்பாடுகளை எஸ்.பி., பகலவன் நேற்று பார்வையிட்டு விளக்கங்களைக் கேட்டறிந்தார். டி.எஸ்.பி., வனிதா, இன்ஸ்பெக்டர் சுந்தர வடிவேலு, ராமதாஸ், சப் - இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தபாபு, திருவேங்கடம், விசுவநாதன் மற்றும் கார்த்திக் கம்யூனிகேஷன் நிறுவனத்தைச் சேர்ந்த வல்லுனர்கள் குழு உடனிருந்தனர். 

வீராணம் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது எப்போது : தள்ளிப் போவதால் விவசாயிகள் புலம்பல்

சிதம்பரம் : வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு தண்ணீர் அனுப்புவதில் துவங்கி, தற்போது பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது வரை அமைச்சர்களின் தேதி கிடைக்காததால் தண்ணீர் திறப்பு தொடர்ந்து தள்ளிப்போகிறது. இதனால் விவசாயிகள் சம்பா சாகுபடியை துவக்க முடியாமல் உள்ளனர்.காவிரி டெல்டா கடைமடை பாசனத்திற்கு ஜூன் 12ம் தேதி மேட்டூரில் இருந்து தண்ணீர் திறப்பது வழக்கம். கடந்த 8 ஆண்டுகளாக பருவ மழை பொய்த்ததால் தண்ணீர் திறப்பு காலதாமதமாகியது. ஆனால் இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவில் ஜூன் 12ம் தேதிக்கும் முன்பாக 6ம் தேதியே டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.கல்லணைக்கு வந்த தண்ணீர் கீழணையில் தேக்கப்பட்டு கடந்த மாதம் 29ம் வீராணத்திற்கு திறந்து விடப்பட்டது. விராணம் நிரம்பியதையொட்டி கடந்த 12 ஆண்டுகளில் ஜூலை மாதம் வீராணத்தில் இருந்து சம்பா சாகுபடிக்கு முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்படுகிறது என்பதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.ஆனால் வீராணம் பாதியளவு நிரம்பியதுமே கடந்த ஜூலை 10ம் தேதி அவசர, அவசரமாக சென்னைக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பணி துவங்கியது.

இன்று துவங்குகிறதுரம்ஜான் மாதம்

கெய்ரோ: மத்திய ஆசியாவில் உள்ள, இஸ்லாமிய மதத் தலைவர்கள் அனைவரும், இன்று (திங்கள்) முதல் ரம்ஜான் மாதம் துவங்குவதாக, அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக, எகிப்து, சவுதி அரேபியா, லெபனான், சிரியா, ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான், குவைத், கத்தார் மற்றும் ஏமன் ஆகிய நாடுகள் வெளியிட்ட அறிக்கையில், "ரம்ஜான் புனித மாதம் இன்று முதல் துவங்குகிறது .

ஜூலை 31, 2011

30 நாட்கள் கெடு விதிப்பு கார், பைக் நம்பர் பிளேட்டில் விதிப்படி எண் எழுத வேண்டும்

அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை: மத்திய மோட்டார் வாகன விதி 50, 51ன் படி அனைத்து வாகனங்களிலும் பதிவு எண் (நம்பர் பிளேட்) பொருத்தப்பட்டு இருக்க வேண்டும். விதிகளின்படி நம்பர் பிளேட்களை பொருத்துவதில்லை. அவரவர் விருப்பத்துக்கு ஏற்றவாறு பிளேட்டில் சிறிதாகவும், பெரிதாகவும் நம்பர்களையும்& எழுத்துக்களையும் ஸ்டைலாக எழுதிக் கொள்கின்றனர். இதனால் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன.
இதனை தடுக்க வாகன உரிமையாளர்கள் விதிகளுக்கு உட்பட்டு 30 நாட்களுக்குள் (ஆகஸ்ட் மாத இறுதிக்குள்) முறையான நம்பர் பிளேட்களை பொருத்த வேண்டும். விதிகளை மீறி வாகனத்தை இயக்கினால், மோட்டார் வாகனங்களின் பதிவு சான்றிதழ் தற்காலிகமாக ரத்து செய்யப்படும். நம்பர் பிளேட்டில் இருக்க வேண்டிய எழுத்துகள், எண்கள் அளவு:
பைக் முன்புறம் நம்பர் பிளேட்: 45 மி.மீ. உயரம், 285 மி.மீ அகலம். எழுத்துகள் மற்றும் எண்கள் 30 மி.மீ. உயரமும், 5 மி.மீ. தடிமனும் இருக்க வேண்டும். 5 மி.மீ. இடைவெளி விட வேண்டும். பைக் பின்புறம் நம்பர் பிளேட்: 100 மி.மீ உயரம், 200 மி.மீ அகலம். எழுத்துகள் 35 மி.மீ உயரமும், 7 மி.மீ தடிமனும், எண்கள் 40 மி.மீ உயரமும், 7 மி.மீ தடிமனும் இருத்தல் வேண்டும். 5 மி.மீ இடைவெளி விட வேண்டும்.
கார் மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் முன்புறம், பின்புறம் நம்பர் பிளேட்: 120 மி.மீ. உயரம், 500 மி.மீ. அகலம். எழுத்துகள் மற்றும் எண்கள் 65 மி.மீ. உயரமும், 10 மி.மீ. தடிமனும் இருக்க வேண்டும். 10 மி.மீ. இடைவெளி விட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஜூலை 30, 2011

உலகின் 2வது அதி உயரமான சூரிய சக்திக் கோபுரம்

உலகின் 2வது அதி உயரமான சூரிய சக்திக் கோபுரம் அரிசோனா பாலைவனத்தில் நிறுவப்படவுள்ளது. இது சுமார் 2600 அடி உயரமான புகைபோக்கியுடன் கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 200 மெகாவாட் மின்சாரத்தினை உற்பத்தி செய்யமுடியும் மேலும் இதன்மூலம் சுமார் 150,000 வீடுகளுக்கு தேவையான மின்சாரத்தினை உருவாக்கமுடியும் எனவும் விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இத்திட்டமானது என்விரோ மிஷன் என்ற நிறுவனத்தினால் அமைக்கப்படவுள்ளது. இதனைக் கட்டி முடிப்பதற்கு 700 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் இதன் மூலம் 1500 புதிய வேலைவாய்ப்புக்கள் உருவாகுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது. சூரிய சக்தி, விசையாழிகள் மற்றும் உயரமான புகைபோக்கி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படவுள்ளது. இத்திட்டமானது சூழலை பாதிக்காத, செயற்திறன் வாய்ந்த சக்தி மூலம் எனஇதனை உருவாக்கவுள்ள நிறுவனத்தினர் பெருமையுடன் தெரிவித்துள்ளனர்.

ஜூலை 28, 2011

மாரடைப்பும் மாரடைப்பல்லாத நெஞ்சு வலிகளும்!

நெஞ்சு வலி என்றால் பயப்படாதவர்கள் எவரும் இருக்க முடியாது. ஏனெனில் எந்த நெஞ்சுவலியானாலும் அதனை மாரடைப்பு என்றே பலரும் கருதுகிறார்கள்.

இதயத்தின் அறைகளுக்குள் எந்த நேரமும் இரத்தம் நிறைந்திருக்கிறது ஆனாலும் அதனை இயக்கும் தசைநார்களுக்கு அந்த இரத்தம் நேரடியாகக் கிடைப்பதில்லை.

இரண்டு சிறிய இரத்தக் குழாய்கள் – கொரனரி நாடிகள் (Coronary arteries) மூலமே கிடைக்கின்றன. இவை முடியுரு நாடிகள் எனப்படுகின்றன.

இவற்றில் ஒன்றில் அல்லது அவற்றின் கிளைகளில் இரத்தம் செல்வது தடைப்பட்டால் அப் பகுதியில் உள்ள இருதயத்தின் தசை நார்களுக்கு இரத்தம் போதிய அளவு கிடைக்காது.

அந்நிலையில் தசை நார்களுக்கு போதிய ஒட்சிசன் கிடைக்காது போய்விடும்.

இது நெஞ்சுவலியாக வெளிப்படும்.

அல்லது தசை நார்களுக்கு இரத்த ஓட்டம் அடியோடு தடைப்படலாம்.

அந் நிலையில் இப்பகுதியிலுள்ள தசைகள் இறந்துவிடவும் கூடும்.

இரண்டு இந்தியர்களுக்கு மகசேசே விருது

மணிலா:இவ்வாண்டிற்கான ரமண் மகசேசே விருதை வென்றவர்களில் இரண்டு பேர் இந்தியாவைச் சார்ந்தவர்களாவர்.

ஆசியாவின் மிக உயர்ந்த விருதான மகசேசவிருது ஆண்டுதோறும் விமானவிபத்தில் இறந்த பிலிப்பைன்ஸ் அதிபர் ரமண் மகசேசேவின் நினைவாக வழங்கப்பட்டு வருகிறது.

1957-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இவ்விருது ஆசிய நாடுகளில் மனித மேம்பாடு மற்றும் சமூக நலனுக்காக பாடுபட்டோருக்கு அளிக்கப்படுகிறது. இவ்விருது ஆசியாவின் நோபல் என அழைக்கப்படுகிறது.

இவ்வாண்டு இவ்விருது வழங்கப்பட்ட 6 நபர்களில் இரண்டுபேர் இந்தியர்களாவர்.

ஜூலை 27, 2011

நோய்களை உணர்த்தும் நகங்கள்!

நகங்களை ஏதோ தேவையில்லாத பகுதியா கவோ, அல்லது அழகுபடுத்திக் கொள்வதற்காக அமைக்கப்பட்ட உறுப்பாகவோ நினைக் கிறோம். அது தவறு. மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் இன்றி யமையாத முக்கிய உறுப்பு நகங்களாகும்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல உடலின் நலத்தை நகத்தில் தெரிந்து கொள்ளலாம். நகத்தின் அமைப்பைக் கொண்டு, நம்முடைய குணாதிசயங்களை சில ஜோதிடர்கள் கூறுவார்கள். அது உண்மையா, பொய்யா என்பது தெரியாது. ஆனால் மருத் துவ உலகில் நகங்களை வைத்தே நம்முடைய உடலில் என்ன பிரச்சினை என்று கூறி விடுகிறார்கள் மருத்துவ அறிஞர்கள்.

நகங்கள் விரல்களுக்கு அழகு சேர்க்க மட்டுமல்ல, கரட்டின் என்ற புரதச்சத்தைக் கொண்ட நகங்கள் விரல் நுனிவரை பரவியுள்ள நரம்பு மற்றும் இரத்தக் குழாய்களை பாதுகாக்கக் கூடிய ஒரு அமைப்பாகும். நகங்கள் இல்லா விட்டால் விரல்களின் முனைகளில் கடினத் தன்மை ஏற்பட்டு விடும்..

இந்த ஆண்டு சமச்சீர் கல்வியை அமல்படுத்த முடியாது: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதம்

புதுடெல்லி : சமச்சீர் கல்வி தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நேற்று பரபரப்பான வாதம் ஆரம்பமானது. ‘‘சமச்சீர் கல்வியை இந்த ஆண்டு அமல்படுத்த முடியாது என்று தமிழக அரசு வக்கீல் வாதாடினார். இன்றும் வாதம் தொடர்கிறது. இந்த ஆண்டே சமச்சீர் கல்வியை அமல் படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மீண்டும் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது.

இந்த மனுவை கடந்த 21ம் தேதி சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சவுகான், பாஞ்சால், தீபக் வர்மா ஆகியோர் விசாரித்து, ‘‘இந்த வழக்கில் எந்த தடையும் விதிக்க முடியாது. ஜூலை 26ம் தேதி இறுதி விசாரணை நடத்தப்படும்’’ என உத்தரவிட்டனர். வரும் 2ம் தேதிக்குள் சமச்சீர் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். தமிழக அரசின் மனுவுக்கு பெற்றோர் தரப்பில் நேற்று உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஜூலை 26, 2011

பிரதிபா பாட்டீல் கையெழுத்திட்டார் இந்தியா & தென்கொரியா அணுசக்தி ஒப்பந்தம்

சியோல் : இந் தியா & தென்கொரியா இடையே அணுசக்தி தொடர்பான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. தென்கொரிய பயணம் மேற்கொண்டுள்ள குடியரசு தலைவர் பிரதிபா பாட்டீல் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். தென்கொரியா, மங்கோலியா நாடுகளில் குடியரசு தலைவர் பிரதிபா பாட்டீல் ஒரு வார அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். தென்கொரிய தலைநகர் சியோலில் அந்நாட்டு அதிபர் லீ மியுங் பாக்குடன் அவரது மாளிகையில் நேற்று விரிவான பேச்சு நடத்தினார்.

20 நிமிடங்கள் நீடித்த சந்திப்பை தொடர்ந்து இரு நாடுகளின் உயரதிகாரிகள் குழுவினர் இடையே ஒரு மணி நேர பேச்சு நடந்தது. இந்த சந்திப்புகளின்போது அணுசக்தியை அமைதியான தேவைகளுக்கு பயன்படுத்தும் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தில் பிரதிபாவும், லீயும் கையெழுத்திட்டனர். அணுசக்தி சப்ளை குழு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு யுரேனியம் உட்பட அணுசக்தி தொடர்பான பொருட்கள் சப்ளைக்கு விதிக்கப்பட்டிருந்த தடை 2008ம் ஆண்டு விலக்கிக் கொள்ளப்பட்டது. அதன் பிறகு நேற்று வரை தென்கொரியாவையும் சேர்த்து இந்தியாவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தில் இணைந்துள்ள நாடுகளின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது.

இந்தியர்களின் பணம் சொற்பமே; போட்டு உடைத்தது சுவிஸ் மத்திய வங்கி

ஜெனீவா:"சுவிட்சர்லாந்து வங்கிகளில், பிற நாட்டவர்கள் சேமித்து வைத்துள்ள பணத்தோடு ஒப்பிடுகையில், இந்தியர்கள் சேமித்து வைத்துள்ள பணம் வெறும் 0.07 சதவீதம் தான்' என, அந்நாட்டு மத்திய வங்கி தெரிவித்துள்ளது.இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில், சுவிஸ் வங்கிகளில் பணம் பதுக்குவது குறித்து நீதிக் கண்காணிப்பு மற்றும் அரசியல் ரீதியிலான நெருக்கடி சமீப காலத்தில் அதிகரித்துள்ளன. இந்நிலையில், முதன் முறையாக, சுவிட்சர்லாந்து தேசிய வங்கி (எஸ்.என்.பி.,) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், அந்நாட்டு வங்கிகளில் 2010ன் இறுதி வரையிலும், இந்தியர்கள் 11 ஆயிரத்து 250 கோடி ரூபாய் (2.5 பில்லியன் டாலர்) பதுக்கி வைத்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

எஸ்.என்.பி., செய்தித் தொடர்பாளர் வால்டர் மியர் இதுகுறித்து கூறியதாவது: இத்தொகையில், 2.1 பில்லியன் டாலர் (9,450 கோடி ரூபாய்) சேமிப்பு மற்றும் வைப்புத் தொகையாக, இந்தியாவின் தனிநபர்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களால் சேமித்து வைக்கப்பட்டுள்ளன. இவை போக, மீதமுள்ள 400 மில்லியன் டாலர் (1,800 கோடி ரூபாய்), இந்தியாவில் உள்ள தனிநபர்கள், தங்களின் கையாட்கள் பேரில் சேமிப்பாக வைத்துள்ளனர். யு.பி.எஸ்., மற்றும் கிரெடிட் சூசி என்ற சுவிசின் மிகப் பெரிய இரு வங்கிகளில் தான், இந்தியர்கள் மற்றும் இந்திய நிறுவனங்கள் பெரும்பான்மையாக தங்கள் பணத்தை சேமித்து வைத்துள்ளன.இவ்வாறு வால்டர் மியர் தெரிவித்தார்.