Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 04, 2011

காட்டுமன்னார்கோவில் விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள்

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் வேளாண்மை துறை மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள் வழங்கப்படுகிறது.இது குறித்து காட்டுமன்னார்கோவில் வேளாண் துறை உதவி இயக்குனர் மதிவாணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: வேளாண் இடுபொருட்கள் 50 சதவீத மானியத்தில் ஜிப்சம் வினியோகம் செய்யப்படுகிறது. பசுந்தாள் உரப்பயிர் தக்கை பூண்டு, ஜின்சல்பேட் மானிய விலையில் காட்டுமன்னார்கோவில், திருமுட்டம், ஆயங்குடி வேளாண் விரிவாக்க மைய கிடங்குகளில் விற்பனை செய்யப்படுகிறது. குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகள் ஜிப்சம் மற்றும் சிங்சல்பேட் வாங்கி பயனடையவும், சம்பா சாகுபடி விவசாயிகள் கோடை மழையை பயன்படுத்தி தக்கை பூண்டு பசுந்தாள் உரப்பயிர் விதைத்து மடக்கி உழுது மண் வளத்தை பெருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...