Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 20, 2012

மாவட்டம் முழுவதும் மகளிர் பேருந்துகளை இயக்க எஸ்பியிடம் வலியுறுத்தல்

கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி படிக்கும் மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் உள்ளிட்டவர்களின் பாதுகாப்பு கருத்தில் கொண்டு மகளிர் பேருந்து இயக்குவதுடன் கண் காணிப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட எஸ்பியிடம் பாமக தரப்பில் நேரில் வலியுறுத்தப்பட்டது. கடலூர் மாவட்ட முதல் பெண் எஸ்பியாக பொறுப்பேற்றுள்ள ராதிகாவை பாமக  நிர்வாகிகள் நேரில் சந்தித்து பேசினர் அப்போது .

மாவட்டம் முழு வதும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளது. கிண்டல், கேலி என ரவுடிகளின் பிடியில் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே மாவட்டம் முழுவதும் மகளிர் பேருந்துகள் இயக்குவதுடன், பேருந்து நிலையம், பொது இடங்களில் போலீசார் கண்காணிப்பு தீவிரப் படுத்த வேண்டும். இதற்காக தனி போலீஸ் குழு அமைக்க வேண்டும் வேண்டும் என கூறி உள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...