Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 21, 2012

வடவாற்றின் கரையை சீரமைக்க கோரிக்கை

காட்டுமன்னார்கோவில், : காட்டுமன்னார்கோவிலில் உள்ள வடவாற்றின் இரு கரைகளும் பலமிழந்து காணப்படுகிறது. இரு கரைகளிலும் சுமார் 25 கிராமங்கள் உள்ளது. வடவாற்றின் தென்கரையில் சாலைகள் மோசமடைந்து உள்ளது. பொதுமக்கள் மிகுந்த சிரமங்களுக்கு இடையே இந்த கரை சாலையை பயன்படுத்தி வருகின்றனர். வடக்கு கரை பகுதி மிகவும் மோசமடைந்து முள் புதர்கள் மண்டி பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத அளவிற்கு மிகவும் மோசமாக உள்ளது.

கடந்த ஆட்சியில் இந்த சாலை காட்டுமன்னார்கோவிலில் இருந்து கஞ்சங்கொல்லை வரை செம்மண் சாலை போடப் பட்டு பொதுமக்கள் பயன்படுத்தினர். தற்போது சாலை மிகவும் மோசமடைந்த நிலையில் உள்ளது. ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் இக்கரையில் மயான கொட் டகை உள்ளது. ஊராட்சி தலைவர்கள் மயான கொட்டகை செல்லும் வரை மட்டுமே சாலையை சீரமைக்கின்றனர். மீதமுள்ள சாலைகள் மோசமடைந்து உள்ளது. இச்சாலையை சீரமைத்து
பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விட வேண்டும் என்பதே இப் பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
-Dinakaran

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...