Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 30, 2012

சம்பா பருவ விதை நெல் மானிய விலையில் விற்பனை

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் பகுதி சம்பா பருவ விதை நெல் மானிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது. நடப்பு சம்பா பருவத்திற்கு காட்டுமன்னார்கோவில் பகுதிக்குத் தேவையான விதை நெல் மானிய விலையில் விற்பனைக்காக இருப்பு வைக்கப்பட்டுள்ளது. காட்டுமன்னார்கோவில், திருமுட்டம் வேளாண்மை விரிவாக்க மையங்களில் சி.ஆர் 1009, (பொன்மனி) பி.பி.டி., ஆந்திரா பொன்னி ஆகிய ரகங்கள் இருப்பு வைத்து விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகள் மானிய விலையில் விதை நெல் வாங்கி வேளாண் துறையின் நவீன தொழில் நுட்பம், திருந்திய நெல் சாகுபடி செய்து செலவினங்களை குறைத்து அதிக மகசூல் பெற வேளாண் துறை வழி காட்டுதலை பின்பற்றி பயன் பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது என வேளாண்மை உதவி இயக்குனர் கனகசபை தெரிவித்துள்ளார்.
-DM

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...