Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 18, 2012

டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம்!


ஜுலை 17: பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக இன்று 17 .07.2012 செவ்வாய் கிழமை தமிழகம் முழுவதும் மதுக்கடைகளுக்கு பூட்டுபோடும் ஆர்ப்பாட்டத்தை அதன் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்திருந்தார்  இதன் அடிப்படையில் இன்று தமிழகம் முழுவதும் ஆர்பாட்டங்கள் நடைபெற்றது.


பரங்கிபேட்டையில் கோ.அருள்முருகன் (8 ஆவது வார்டு கவுன்சிலர், நகர செயலாளர்) ,  மகேஷ் (மாவட்ட வன்னியர் சங்க செயலாளர்) , சங்கர் (மாவட்ட செயற்குழு உறுப்பினர்) ஆகியோர் தலைமையில் ஏராளமான பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்களும், வன்னியர் சங்க இளைஞர்களும் கலந்து கொண்டு மதுவிற்கு எதிரான கோசங்களை எழுப்பினர்.


பரங்கிபேட்டை பேருந்து நிலையம் அருகில் உள்ள மதுக்கடைக்கு  பூட்டு  போட இவர்கள் முயன்ற  போது காவல்துறையினர் அதை தடுத்து நிறுத்தி கைது செய்து வாகனங்களில்  ஏற்றி சென்றனர்.

இதில் மனித நேய ஆர்வலர் கா.மு.கவுஸ் கலந்து கொண்டார்  அனைவரையும் கைது செய்ய காவல்துறையினர் முயன்றபோது தனக்கு நெஞ்சி வலிப்பதாக கூறி மருத்துவமனைக்கு சென்றார், (அரசியல் தலைவர்களை பின்பற்றுகிறார் போலும்)
செய்தி:  D.முத்துராஜா 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...