Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அக்டோபர் 08, 2011

காட்டுமன்னார்குடியில் பெட்ரோல் கிடைக்காமல் வாகன ஓட்டிகள் அவதி

     காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள இரண்டு பெட்ரோல் பங்குகளும் மூடப்பட்டதால் பெட்ரோல் கிடைக்காமல் வாகன ஓட்டிகள் பெரும் அவதியடைந்து வருகின்றனர்.காட்டுமன்னார்கோவில் தாலுகாவிற்குட்பட்ட பகுதிகள் பெரும்பான்மையாக கிராமப் பகுதியாக உள்ளது. இப்பகுதியில் உள்ள வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களுக்கு பெட்ரோல் போட காட்டுமன்னார்கோவில் நகர் பகுதிக்கு வரவேண்டும்.வடவாற்றின் ஓரத்தில் இந்தியன் ஆயில் நிறுவனத்திற்குச் சொந்தமான பெட்ரோல் பங்க்கும், ரெட்டியார் சாலையில் எச்.பி., நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு பெட்ரோல் பங்க் என இரண்டு பங்க்குகள் உள்ளன.

கடந்த 5 நாட்களாக ரெட்டியார் ரோட்டில் உள்ள பங்க் மூடப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க்கிற்கு அதிகளவில் சென்றதால் அங்கும் பெட்ரோல் தீர்ந்தது.இதனால் காட்டுமன்னார்கோவில் பகுதியில் இரண்டு நாட்களாக பெட்ரோல் கிடைக்காமல் வாகன ஓட்டிகள் பெரும் அவதியடைந்து வருகின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...