Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அக்டோபர் 04, 2011

காட்டுமன்னார்கோவில் பகுதியில் பதட்டமான ஓட்டுச் சாவடிகள்

காட்டுமன்னார்கோவில், குமராட்சி பகுதியில் 17 கிராமங்களில் பதட்டமான ஓட்டுச் சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது.காட்டுமன்னார்கோவில், குமராட்சி பகுதியில் வரும் 19ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதையொட்டி உளவு துறை போலீசார் பதட்டமான ஓட்டுச்சாவடிகள் பட்டியல் மற்றும் அதிக அளவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டிய இடம் குறித்து தகவல் சேகரித்து மாவட்ட காவல் துறைக்கு அனுப்பியுள்ளனர்.

 அதில் காட்டுமன்னார்கோவில் பகுதியில் கண்டமங்கலம், குருங்குடி, குணவாசல், பழஞ்சநல்லூர், கொல்லிமலை, கீழ்பாதி, சந்தைதோப்பு ஆகிய பகுதிகளும், சோழத்தரம் பகுதியில் அறந்தாங்கி, வடக்கு பாளையம், சோழத்தரம், முடிகண்டநல்லூர், மாமங்கலம் ஆகிய பகுதிகளும்,

குமராட்சி பகுதிகளில் சிறகிழந்தநல்லூர், புளியங்குடி, வெல்லூர், மெய்யத்தூர், தெம்மூர் ஆகிய பகுதிகள் பதட்டமான பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...