Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அக்டோபர் 28, 2011

5 நாட்களில் உலக மக்கள் தொகை 700 கோடி

இன்னும் 5 தினங்களில் உலக மக்கள் தொகை 700 கோடியைத் தொடும் என்று அய்.நா. தெரிவித்துள்ளது.

ஐ.நா. சார்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட உலக மக்கள் தொகை தொடர்பான அறிக்கையில் இந்தத் தகவல் கூறப்பட்டுள்ளது. அறிக்கையில் மேலும் கூறியிருப்பது: மருத்துவத்துறையின் வளர்ச்சி யால் உலகம் முழுவதும் மனிதர்களின் ஆயுள்காலம் நீடித்துள்ளது. மக்கள் தொகை பெருக்கமே இதைக் காட் டுகிறது.

மக்கள் தொகைப் பெருக் கத்தால் மனித சமுதாயத்துக்கு பல சாதகமும், பாதகமும் உண்டு. இளைஞர்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. உலக மக்கள் தொகையில் 10-24 வயதுடையோர் 180 கோடி பேர் உள்ளனர்.

இவர்களுக்கு வரும் காலங்களில் அரசியல், பொருளாதார துறைகளில் நல்ல வாய்ப்பு உள்ளது. இதை இவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

வரும் காலங்களில் முதலீடு செய் வதில் உலக மக்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளில் அதிக முதலீடு செய்ய வேண்டும்.

இளைஞர் களின் எதிர் கால நலனைக் கருத்தில் கொண்டு இத்துறைகளில் அதிக முதலீடு அவசியமாகிறது. இதில் அவர்களின் தனிப்பட்ட நலன் மட்டு மல்லாது ஒட்டுமொத்த
மனித சமுதாயத்தின் நலனும் உள்ளது.

இது குறித்து உலக மக்கள் எடுக்கும் தெளிவான முடிவைப் பொறுத்தே நாளையே சமுதாயம் அமையும். இல்லையேல் உலக நாடுகளை இப்போது பீடித்துள்ள பொருளாதாரப் பின்ன டைவு உள்ளிட்ட பிரச்சினைகள் அகல வாய்ப்பில்லை. தொடர்கதை யாகவே இருக்கும். மக்கள் தொகை பெருக்கத்தால் நாம் ஏராளமான சவால்களை எதிர் கொள்ள வேண் டியுள்ளது.

ஏற்கெனவே மக்களி டையே ஏற்றத் தாழ்வுகள், ஆண்-பெண்களுக்கு உரிமை அளிப்பதில் பாகுபாடு நிலவுகிறது.

உலகம் முழுவதும் வசிக்கும் கோடிக்கணக்கான பெண்கள் தங்களது விருப்பம்போல் கருத்தடை செய்துகொள்ளும் உரிமை மறுக் கப்படுகிறது. பெரும்பாலான பள்ளி மாணவர்களுக்கு பாலியல் கல்வி கிடைப்பதில்லை. வரும் காலங்களில் இந்தப் பிரச்சினைகள் மேலும் வலு வடையவே வாய்ப்புள்ளது என்று அய்.நா. அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...