Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூன் 28, 2013

தொழில்நுட்பக் கல்லூரி சேர்க்கைக்கான கலந்தாய்வு

சிதம்பரம் அண்ணாமலைநகர் முத்தையா தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பட்டயப் படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 3, 4 மற்றும் 5 தேதிகளில் நடைபெற உள்ளது என கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ஏ.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி: முத்தையா தொழில்நுட்பக் கல்லூரியில் சேர விண்ணப்பித்த மாணவ, மாணவிகளுக்கு அரசு விதிமுறைப்படி மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப்படுத்தி, கலந்தாய்வுக்காக அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இக்கல்லூரியில், கலந்தாய்வுக்காக அழைக்கப்படும் மாணவர்களின் தரவரிசைப்பட்டியல் விவரத்தை கல்லூரி அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம்.இந்த ஆண்டு சேர்க்கைக்கான தரவரிசை மதிப்பெண்கள் விவரம்:
பொதுப்பிரிவு - 382,
பின்தங்கிய வகுப்பு - 229.
பின்தங்கிய வகுப்பு (முஸ்லிம்)- 306, 
மிகவும் பிற்பட்டோர் - 331,
ஆதிதிராவிடர், மலைவாழ் சாதியினர்,
ஆதிதிராவிடர் (அருந்ததியர்)- 211.

-Dinamani

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...