Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 05, 2012

மதுரை:முஸ்லிம் பிரமுகருக்கு பார்சலில் வெடிக்குண்டு! பின்னணியில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள்?

மதுரை:மதுரையில் முஸ்லிம் பிரமுகர் ஜமால் மைதீன் என்பவருக்கு வந்த பார்சலில் 2 வெடிகுண்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஜமால் மைதின் மாவட்ட அ.இ.அ.தி.மு.க சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது அலுவலகத்திற்கு வந்த பார்சலலை வாங்க அவரத அலுவலகத்தில் யாரும் இல்லாததால் அருகிலிருந்த நகைப் பட்டறையில் ஒப்படைக்கப்பட்டது. பார்சலை வாங்கிய பட்டறைக்காரரர் பார்சலை பிரித்துப் பார்த்த போது அதில் டைமர் பொருத்தப்பட்டு வெடிக்கும் நிலையில் தயாராக ஒரு குண்டும், தயார் நிலையில் இல்லாத நிலையில் மற்றொரு குண்டும் இருப்பது கண்டறியப்பட்டது. மறவர்சாவடியில் உள்ள பட்டறைக்கு விரைந்து வந்த போலீசார் பார்சலை கைப்பற்றி தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். முஸ்லிம் பிரமுகர் ஒருவருக்கு வெடிக்குண்டு பார்சல் அனுப்பியதன் பின்னணியில் ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் கைவரிசை இருக்கலாம் என கருதப்படுகிறது. எனவே போலீஸார் தங்களது விசாரணையை அவர்கள் பக்கம் திருப்புவார்களா? என கேள்வி எழுந்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...