Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 01, 2012

சூடான் எல்லையில் அவசரநிலை அறிவிப்பு

தெற்கு சூடான் எல்லை யில் உள்ள பகுதிகளில், சூடான் அரசு அவசர நிலையை அறிவித்துள் ளது. சூடான் நாட்டில், 20 ஆண்டுகளாக நீடித்த உள்நாட்டு சண்டையில், 15 லட்சம் பேர் பலியா யினர். அய்.நா., தலை யீட்டின் பேரில், கடந்த ஆண்டு தெற்கு சூடான், தனி நாடாக உருவானது. சூடான் மக்கள் விடு தலை இயக்கத்தினர் தற் போது தெற்கு சூடானை ஆட்சி செய்து வருகின் றனர். இரு நாட்டு எல் லையில் உள்ள ஹெக் லிக் என்ற இடத்தில், எண்ணெய் வளம் அதிக மாக உள்ளது. இதை தங்களிடம் ஒப்படைக் கும்படி சூடான் அரசு, தெற்கு சூடானை எச்சரித்து வந்தது. இதற்கு தெற்கு சூடான் மறுப்பு தெரிவித்ததால், இரு நாடுகளுக்கிடையே சமீபத்தில் சண்டை நடந் தது.

இந்த சண்டையில், இருதரப்பிலும் 22 வீரர்கள் பலியாயினர். ஹெக்லிக் பகுதியி லிருந்து, தெற்கு சூடான் தனது படையை திரும்ப பெறவில்லையென்றால், அந்நாட்டுடன் போர் நடக்கும்' என, சூடான் அதிபர் ஓமர் அல் பஷீர் தெரிவித்திருந்தார். சண்டை நடந்தால், தெற்கு சூடானுக்கு ஆதரவளிப்போம்' என, உகாண்டா தெரிவித்தி ருந்தது. நிலைமை விபரீத மாக போவதை கண்ட அய்.நா., பொதுச்செய லர் பான் -கி- மூன், சர்ச்சைக்குரிய ஹெக்லிக் பகுதியிலிருந்து, தெற்கு சூடான் தனது படை களை திரும்பப் பெற வேண்டும் எனக் கூறியி ருந்தார். இதைத் தொடர்ந்து, தன்னுடைய படை களை திரும்பப் பெறு வதாக, தெற்கு சூடான் அதிபர் சால்வா கிர் அறி வித்தார்.

இருப்பினும், சூடான் படையினர் தொடர்ந்து குண்டு வீசி வருவதாக, தெற்கு சூடான் தெரிவித்துள்ளது. இதற்கிடையே தெற்கு சூடானையொட் டிய கார்டோபன், வொயிட் நைல், செனார்
ஆகிய பகுதிகளில் சூடான் அதிபர் அல் பஷீர், அவ சர நிலையை அறிவித்து உள்ளார். இதன் மூலம் தெற்கு சூடானுடனான வர்த்தகம் துண்டிக்கப் பட்டுள்ளது. அவசர நிலையால், போர் தொட ரக்கூடிய அச்சம் ஏற்பட் டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...