Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜனவரி 31, 2012

மேட்டூர் அனல் மின் நிலையத்தின் சோதனை இயக்கம் தொடக்கம்


நவீன தொழில் நுட்பத்துடன் மேட்டூரில் புதிதாக அமைத்துள்ள 600 மெகாவாட் அனல் மின் நிலையத்தின் சோதனை இயக்கம் இன்று தொடங்கியது.
தமிழ்நாட்டில் மேட்டூரில் 840 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட அனல் மின் நிலையம்(தெர்மல்) அருகில் 3,550 கோடி ரூபாய் செலவில் நவீன தொழில்நுட்பத்துடன் புதிதாக 600 மெகாவாட் அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.


இந்த புது அனல் மின் நிலையத்தின் முதல்கட்ட கொதிகலன் சோதனை, இன்று கொதிகலனில் நீரை சூடாக்கி அதில் இருந்து அதிக அழுத்தத்துடன் நீராவியை வெளியேற்றி சோதனை நடத்தப்படுகிறது.


கொதிகலன் சோதனை 10 நாட்கள் நடக்கும். தொடர்ந்து அடுத்த கட்ட சோதனைகள் நடைபெறும். சோதனைகள் முடிந்து மின் உற்பத்தி தொடங்க இன்னும் ஆறு மாதங்களாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...