Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

பிப்ரவரி 06, 2011

திருச்சியில் விமான நேரங்கள் மாற்றம்!

திருச்சியில் இருந்து இயக்கப்படும் ஏர் இந்தியா விமான நேரங்கள் மாற்றப்பட்டு உள்ளது. இது தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது.

சென்னை- திருச்சி- கோலாலம்பூருக்கு தினமும் இயக்கப்படும் ஐ.எக்ஸ்622 விமானம் சென்னையில் இருந்து இரவு 10.50 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு 11.55 மணிக்கு வரும். திருச்சியில் இருந்து கோலாலம்பூருக்கு நள்ளிரவு 1.20 மணிக்கு புறப்படும். அதே போன்று கோலாலம்பூர்- திருச்சி- சென்னைக்கு தினமும் இயக்கப்படும் ஐ.எக்ஸ்621 விமானம் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு காலை 10.35மணிக்கு வரும் பிறகு 11.25 மணிக்கு சென்னைக்கு புறப்படும்.

சிங்கப்பூர்-திருச்சி இடையே தினமும் இயக்கப்படும் ஐ.எக்ஸ்68, விமானம் திருச்சிக்கு காலை 10.25 மணிக்கு வரும். அதே போல திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு (ஐ.எக்ஸ்682) தினமும் 1.10 மணிக்கு புறப்படும். வாரம் தோறும் திங்கள், புதன், வெள்ளி, சனிக்கிழமைகளில், சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு இயக்கப்படும் ஐ.எக்ஸ் 684 விமானம் பகல் 11.25 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்படும்.

திங்கள், புதன்,வியாழன், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் திருச்சி-துபாய் விமானம் (ஐ.எக்ஸ்611) திருச்சியில் இருந்து பகல் 11.40 மணிக்கு துபாய்க்கு புறப்படும், சனிக்கிழமை பகல் 1.50 மணிக்கு புறப்பட்டு செல்லும். திங்கன்,புதன்,வியாழன், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் துபாயில் இருந்து வரும் விமானம் (ஐ.எக்ஸ்612) திருச்சிக்கு நள்ளிரவு 11.35 மணிக்கு வரும்.

வார நாட்களில் சனிக்கிழமைகளில் இயக்கப்படும் சென்னை-திருச்சி-அபுதாபி விமானம் (ஐ.எக்ஸ்613)சென்னையில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்கு திருச்சி வரும். பிற்பகல் 3.30 மணிக்கு அபுதாபிக்கு புறப்படும். வெள்ளி,ஞாயிற்றுக் கிழமைகளில் இயக்கப்படும் அபுதாபி-திருச்சி-சென்னை விமானம் (ஐ.எக்ஸ்614)அபுதாபியில் இருந்து நள்ளிரவு 1மணிக்கு திருச்சிக்கு வரும். இரவு 1.55 மணிக்கு சென்னை புறப்பட்டு செல்லும். இவ்வாறு இதில் கூறப்பட்டு உள்ளது.
Source: maalaimalar

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...