Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஏப்ரல் 27, 2010

கடலூர் மாவட்டத்தில் பலத்த ​பாதுகாப்பு ஏற்பாடுகள்

கடலூர்:
எதிர்க்கட்சிகள் இன்று ​(செவ்வாய்க்கிழமை)​ அறிவித்து இருக்கும் முழு அடைப்பை முன்னிட்டு,​​ பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக,​​ கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் தெரிவித்தார்.
திங்கள்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் கூறியது:
கடலூர் மாவட்டத்தில் 1,800 போலீஸôர் மற்றும் அதிகாரிகள் மற்ற பணிகளை அனைத்தையும் நிறுத்தி விட்டு,​​ பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள்.​ அரசு அலுவலகங்கள்,​​ பள்ளிகள்,​​ கல்லூரிகள்,​​ வணிகப் பகுதிகள்,​​ பஸ் நிலையங்கள்,​​ ரயில் நிலையங்கள் போன்றவற்றுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.​ ​வர்த்தக நிறுவனங்களை மூடுமாறு யாராவது கட்டாயப்படுத்தினால்,​​ அவர்கள் உடனடியாகக் கைது செய்யப்படுவார்கள்.​ வன்முறையில் ஈடுபடுவார்கள் என்று சந்தேகப்படுவோர் ​ திங்கள்கிழமை இரவு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்படுவார்கள்.​ செவ்வாய்க்கிழமை முழு அடைப்பு என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடுவோர் உடனடியாகக் கைது செய்யப்படுவார்கள்.​ கடுமையான சட்டங்களில் அவர்கள் மீது வழக்குத் தொடரப்படும்.​ அவர்களைக் கைது செய்து வைப்பதற்காக,​​ திருமண மண்டபங்கள் தயாராக உள்ளன.
போலீஸ் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.​ 156 போலீஸ் வாகனங்கள் ஆயுதம் தாங்கிய போலீஸôருடன் ரோந்துப் பணியில் ஈடுபடும்.​ சட்டம் ஒழுங்கு சீர்குலையாமல் இருக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.​ மக்கள் பயமின்றி தங்கள் பணிகளைச் செய்யலாம்.​ அனைத்து உள்ளூர் பஸ்கள் இயக்கமும் திங்கள்கிழமை இரவு 10 மணிக்கு மேல் நிறுத்தப்படும்.​ செவ்வாய்க்கிழமை காலை முதல் பஸ்கள் அனைத்தும்,​​ போலீஸ் பாதுகாப்புடன் கான்வாயில் அனுப்பப்படும்.​ ஆயுதம் தாங்கிய போலீஸôர் பாதுகாப்புக்காகச் செல்வார்கள் என்றார் எஸ்.பி.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...