Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அக்டோபர் 03, 2013

கொள்ளுமேடு தீ விபத்து! வீடு கடைகள் எரிந்து சாம்பல் !!



நமதூர் கொள்ளுமேடு இறக்கத்தில் அமைந்துள்ள ரோட்டோர கடைகள் மற்றும் வீடுகள் எரிந்து நாசமாயின. நேற்று (02/09/2013)நள்ளிரவு 12 மணியளவில் ஏற்பட்ட பெரும் தீயானது வானக்கார் இஸ்மாயில் அவர்களின் கடை, சிதம்பரம் அவர்களின் கீற்று கடை, பொட்டிக்கடை மற்றும் அவரின் வீடு அனைத்தும் நெருப்பில் எரிந்து நாசமாகியது.. டீக் கடை சாத்தனின் வீடு மற்றும் டீக்கடைகளும்  முற்றிலும் எரிந்து நாசமாகியது...தீப்பொறி பற்றியவுடன் தவ்ஹீத் மர்கசில் விடப்பட்ட அழைப்பை கேட்டு மக்கள் பதறி அடித்து ஓடி வந்தனர், பின்னர் தீ அணைப்பு வண்டி வழக்கம் போல் எல்லாம் முடிந்த உடன் வந்து மிச்சம் மீதியை அணைத்தனர்.இக்கோர சம்பவதிர்காகான காரணம் இதுவரை அறியப்படவில்லை.இப்பெரும் தீ விபத்தில் எந்த ஒரு உயிர் சேதமோ அல்லது காயமோ இல்லாதது சற்று ஆறுதலாக இருந்தது.

செய்தி: அபூ தப்ஹீம் 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...