Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மார்ச் 28, 2011

எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு தொடங்கியது..

இன்று முதல் SSLC என்கிற 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கியுள்ளது தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைய TNTJPNO சார்பாக எல்லாம் வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்கின்றோம்..

தமிழகம், புதுவையில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் திங்கள்கிழமை (மார்ச் 28) தொடங்குகின்றன. ஏப்ரல் 11 வரை நடைபெறும் இத்தேர்வுகளை சுமார் 8.57 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்.

பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் முடிவடைந்ததை அடுத்து கடந்த 22-ம் தேதி மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் தேர்வுகள் தொடங்கின. இந் நிலையில் 10-ம் வகுப்பு, ஓ.எஸ்.எல்.சி. தேர்வுகள் திங்கள்கிழமை தொடங்குகின்றன. முதல் நாளான திங்கள்கிழமை மொழிப்பாடம் முதல் தாள் தேர்வு நடைபெறுகிறது. 29-ம் தேதி இரண்டாம் தாள், 31-ம் தேதி ஆங்கிலம் முதல் தாள், ஏப்ரல் 1-ம் தேதி ஆங்கிலம் 2-ம் தாள் தேர்வுகள் நடைபெறுகின்றன.

ஏப்ரல் 5-ம் தேதி கணிதம், 8-ம் தேதி அறிவியல், ஏப்ரல் 11-ம் தேதி சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெறுகின்றன.


இத்தேர்வுகளை 4.22 லட்சம் மாணவர்கள், 4.35 லட்சம் மாணவிகள் எழுதுகின்றனர். 9,655 பேர் தனித் தேர்வர்களாக தேர்வு எழுதுகின்றனர். தேர்வையொட்டி தமிழகம், புதுவையில் 2,923 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுகளில் முறைகேடுகளைத் தடுக்க முதன்மைக் கல்வி அலுவலர்கள் தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...