Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 18, 2010

அதிக நேரம் கம்ப்யூட்டர் பார்த்தால் ஆழ்ந்த தூக்கம் "அவுட்'

கம்ப்யூட்டர் மற்றும் ஜபாட் திரையை அதிக நேரம் பார்ப்பவர்களுக்கு ஆழ்ந்த தூக்கம் வருவதில்லை என, அமெரிக்கா விஞ்ஞானிகள் கண்டுபடித்துள்ளனர்.கம்ப்யூட்டர் திரையை நீண்ட நேரம் பார்ப்பவர்கள் குறித்து அமெரிக்க விஞ்ஞானிகள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில், கம்ப்யூட்டர், லேப்-டாப் மற்றும் ஜபாட் திரைகளை நீண்ட நேரம் பார்ப்பவர்களுக்கு நாளடைவில் தூக்கம் வருவதில் சிக்கல் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.கம்ப்யூட்டர் திரையிலிருந்து வெளிப்படும் அதிக சக்தி வாய்ந்த ஒளிக்கற்றைகள், மனித மூளையின் வழக்கமான செயல்பாடுகளை பாதிப்பதும் தெரியவந்தது.மனித மூளை காலை சூரிய வெளிச்சம் வந்தவுடன் இயங்க ஆரம்பித்து, இரவு ஒளி மங்கியவுடன் செயல்பாடுகளை குறைத்துக் கொள்ளும் வகையில் செயல்படுகிறது.
இதை, "மெலட்டோனின்' என்ற ஹார்மோன் கட்டுப்படுத்துகிறது. இந்த கட்டுப்படுத்தும் ஆற்றல் ஒரு அறிவியல் விந்தையாக கருதப்படுகிறது. ஆராய்ச்சியாளர்களின் கூறுப்படி, கம்ப்யூட்டர் போன்ற மின்னணு சாதனங்களிலிருந்து வெளிப்படும் நீல நிற வெளிச்சம், "மெலட்டோனின்' ஹார்மோன் செயல்பாட்டை பாதித்து, தூக்கத்தை கட்டுப்படுத்துவதாக தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து நார்த்வெஸ்ட் பல்கலைக் கழக மூளை அறிவியல் துறை பேராசிரியர் பில்லீஸ் சீ கூறுகையில், "மனிதனின் கண்கள், நீல நிறத்தை பகல் பொழுதாக எடுத்துக் கொள்ளும் வடிவமைப்பை பெற்றறுள்ளது.இரவில் கம்ப்யூட்டரை தொடர்ந்து பார்ப்பதால், அதிலிருந்து வரும் நீல நிற வெளிச்சத்தைக் கொண்டு "மெலட்டோனின்' ஹார்மோன், தூக்கத்தை தவிர்த்து, விழிப்புடன் இருக்க மூளையைத் தூண்டும்.இதனால், நாளடைவில் தூக்கம் வருவதில் சிக்கல் எழும். இரவில் நிம்மதியாக தூங்க, நல்ல புத்தகங்களைப் படிப்பதும் நல்ல வழி,' என்றார்.-

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...