Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 31, 2010

இட ஒதுக்கீடு கோரி போராட்டம்

சென்னை : முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி ஜனநாயக முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தொடர் முழக்கப் போராட்டம் சென்னை மெமோரியல் ஹால் அருகே நடந்தது.
மாநில பொதுச் செயலர் காஜாமொய்தீன் தலைமையில் நடந்த போராட்டத்தில் அவைத் தலைவர் பாஷா, துணைத் தலைவர் தஸ்தகீர், பொருளாளர் அப்துல் ரஹ்மான் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் இந்தியா முழுக்க 50 சதவீதத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்று சச்சார் கமிட்டி புள்ளி விவரம் அளித்துள்ளது. கல்வி, வேலை வாய்ப்பில் முஸ்லிம்கள் மிகவும் பின் தங்கி உள்ளதால், அவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கலாம் என்று ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பல மாதங்களுக்கு முன் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.எனவே, மத்திய அரசு இனியும் காலதாமதப்படுத்தாமல் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென வலியுறுத்தி தொடர் முழக்கம் செய்யப்பட்டது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...