Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூலை 15, 2010

ஆப்பிரிக்க நாடுகளை விட இந்தியாவில் 8 மாநிலங்களில் கடும் வறுமை: 42 கோடி பேர் தவிப்பு

ஐ.நா. சபையின் மனிதவள மேம்பாட்டுத்துறை இந்தியா குறித்து ஒரு ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வறிக்கை வரும் அக்டோபர் மாதம் வெளியிடப்பட உள்ளது. ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள் தற்போது தெரிய வந்துள்ளது. அந்த தகவல்கள் இந்தியர்களுக்கு அதிர்ச்சி கொடுப்பதாக உள்ளது.

2020-ம் ஆண்டு அதாவது இன்னும் 10 ஆண்டுகளில் உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றாக இந்தியா உயர்ந்து விடும் என்று கூறப்படும் நிலையில், இந்தியாவில் 8 மாநிலங்களில் மிக கடுமையான வறுமை நிலவுவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக பீகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், ஒரிசா, ராஜஸ்தான், உத்தரபிரதே சம், மேற்கு வங்கம் ஆகிய 8 மாநிலங்களில் மக்கள் வறுமையில் சிக்கி தவிப்ப தாக குறிப்பிடப்பட்டுள்ளது.

8 மாநிலங்களிலும் 42 கோடி பேர் வறுமையில் தவிக்கிறார்கள். ஆனால் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள 26 நாடுகளில் 41 கோடி பேர் வறுமையில் இருப்பது தெரிய வந்துள்ளது.

இதன் மூலம் ஆப்பிரிக்க நாடுகளை விட இந்தியாவில் வறுமை அதிகமாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியப் பெண்களில் பாதிபேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...