Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 17, 2010

சர்க்கரை நோய்

இன்று உலக மக்களை ஆட்டிப்படைக்கும் கொடிய நோய்களுள் சர்க்கரை வியாதியும் ஒன்று. எய்ட்ஸ், கேன்சர் போன்றவற்றை விட பாடாய் படுத்திக்கொண்டிருக்கும் கொடிய நோய் இந்த நீரிழிவு நோய் என்று சொல்லப்படும் சர்க்கரை நோயே.

உலக அளவில் 246 மில்லியன் மக்கள் தற்போது நீரிழிவு நோயின் தாக்கத்தில் இருக்கின்றனர். இன்னும் 5 ஆண்டுகளில் அந்த எண்ணிக்கை 500 மில்லியனாக மாற வாய்ப்புள்ளது என உலக சுகாதார ஆய்வகம் தெரிவித்துள்ளது. இந்திய மக்கள் தொகையில் 60 சதவிகிதம் பேர் இந்நோயின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும் என்கின்றனர். குறிப்பாக தென்னிந்திய மக்களே அதிகம் பாதிப்பு அடைகின்றனர்.

நீரிழிவு நோயை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

முதல் வகை

சிறு வயதிலிருந்தே கணையம் இன்சுலீனை சரிவர சுரக்காததால் இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகரிக்கக்கூடும். அல்லது இன்சுலின் மாறு பாட்டால் கூட இது நேரிடலாம். இவ்வகையான நீரிழிவு நோய் கடைசி வரை இருந்துகெண்டே இருக்கும்.

இரண்டாம் வகை

90 சதவிகிதம் மக்கள் இந்தவகை நீரிழிவு நோயின் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். 40 வயதைக் கடந்தவர்கள் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிக உடல் எடை கொண்டவர்கள், மன அழுத்தம் கொண்டவர்கள், உணவு மாறுபாடு கொண்டவர்கள், பரம்பரையாகவும் சிலர் இந்த வகை வியாதியால் பாதிக்கப்படுகின்றனர்.

மூன்றாம் வகை

இந்த வகை திடீரென உணவு மாறுபாட்டால் ஏற்படுவதாகும். கருத்தரித்த பெண்களுக்கு இந்த வகை அதிகம் உண்டாகிறது. மகப்பேறு முடிந்தவுடன் மாறிவிடுகிறது.

சர்க்கரை நோயின் அறிகுறிகள்

1.அதிகம் பசி உண்டாகும்.
2.நாவறட்சி அடிக்கடி ஏற்படும்.
3.உடல் சோர்வாகவே இருக்கும்.
4.அடிக்கடி சிறுநீர் பிரியும்.
5.கை, கால் மரத்துப் போகும். சில நேரங்களில் தடித்துப் போகும்.
6.கண் பார்வை மங்கல் உண்டாகும்.
7.பாதங்கள் உணர்வற்ற தன்மை உண்டாகும்.
8.திடீரென உடல் எடை குறைதல், கூடுதல் போன்றவை உண்டாகும்.
9.அதிக கோபம், மன எரிச்சல், மன உளைச்சல் ஏற்படும்.
10.உடலில் சிறு காயங்கள் ஏற்பட்டால் அது வெகு நாட்களுக்கு ஆறாமல் இருக்கும்.

இந்த அறிகுறிகள் இருப்பின் உடனே இரத்தத்தில் சர்க்கரையின் அளவை பரிசோதித்துக்கொள்வது நல்லது.சர்க்கரை இருக்கிறது என்று தெரிந்தவுடன் சிலர் பயங்கொள்ள ஆரம்பிப்பார்கள். ஆனால் பயம் தேவையில்லை.உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி மூலமே இந்த நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும்.

உணவுக் கட்டுப்பாடு

நீரிழிவை கட்டுப்படுத்த நம்மால்தான் முடியும். எந்த மருந்துகளும் செய்யாத வேலையை நம் அன்றாட உணவுகள் செய்யும் வல்லமை கொண்டது.உணவின் தன்மையறிந்து, வகையறிந்து அளவோடு உண்ண, உணவே அற்புத மருந்தாய் வேலை செய்யும்.

நீரிழிவு உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய சில காய்கறிகள்

வாழைப்பூ, வாழைத்தண்டு, முட்டைக்கோஸ், கத்திரிப்பிஞ்சு, வெண்டைக்காய், முருங்கைக்காய், புடலங்காய், பாகற்காய், சுண்டைக்காய், கோவைக்காய், பீர்க்கம் பிஞ்சு, அவரைப் பிஞ்சு.

இந்த காய்கறிகள் அனைத்தும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை. இவற்றை பச்சடியாகவோ, கூட்டாகவோ செய்து சாப்பிடலாம்.

பொன்னாங்கண்ணிக் கீரை, சிறுகீரை, அரைக்கீரை, வெந்தயக் கீரை, முசுமுசுக்கை கீரை, வல்லாரைக் கீரை, மணத்தக்காளிக் கீரை, கொத்தமல்லிக் கீரை, கறிவேப்பிலை. நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினமும் ஒரு கீரையேனும் சாப்பிட வேண்டும்.

நீரிழிவைக் கட்டுப்படுத்தும் கீரைகள் அனைத்தும் சூப்பாகவும் செய்து அருந்தலாம். காம்பு நீக்கி, சுத்தம் செய்து அரிந்த கீரையுடன் சிறிது சீரகம், மிளகு, பூண்டு, சாம்பார் வெங்காயம், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து 2 டம்ளர் தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க வைத்து 1 டம்ளர் அளவு வந்தவுடன் அருந்தலாம்.

நீரிழிவைக் கட்டுப்படுத்தும் சில உணவு வகைகள்

வெந்தயம், உளுந்து, எள், கசகசா, கேழ்வரகு, கோதுமை, சிவப்பு அவல், சீரகம், சோம்பு, ஓமம்.

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கான உணவுப் பட்டியல்

1.காலை - ஒரு கப் டீ அல்லது காஃபி (சர்க்கரை இல்லாமல்)

2.காலை டிபன் - இட்லி - 3, தோசை - 2, சப்பாத்தி - 2, சம்பா ரவை உப்புமா - 1 கப், மிளகு பொங்கல் - 1 கப் (ஏதேனும் ஒன்று மட்டும்). இதனுடன் புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி, சின்ன வெங்காய சட்னி ஏதேனும் ஒன்று சேர்த்துக் கொள்ளலாம்.

3.மதிய உணவு - 1 கப் சாதம், 1 கப் காய்கறி சாம்பார், காய்கறி பச்சடி, காய்கறி அவியல், மற்றும் கீரை.

4.மாலை - முளைகட்டிய பயறு வகைகளில் ஏதேனும் ஒன்று. 1 கப் காபி அல்லது டீ - சர்க்கரை இல்லாமல்.

5.இரவு உணவு - கோதுமை சார்ந்த உணவுகளான, தோசை, சப்பாத்தி, உப்புமா போன்றவற்றுடன் சட்னி வகைகள் சேர்த்துக் கொள்ளலாம்.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டியவை

சர்க்கரை, குளுக்கோஸ், இனிப்பு பலகாரங்கள், கேக், சாக்லேட், ஐஸ்கிரீம், வெல்லம், உருளைக் கிழங்கு, சேனைக்கிழங்கு, மாம்பழம், வாழைப்பழம், சப்போட்டா, குளிர்பானங்கள்.

கேரட், பீட்ரூட் குறைந்த அளவு மாதம் இருமுறை சாப்பிடலாம்.

உடற்பயிற்சி

சர்க்கரை நோயின் அறிகுறிகள் இருந்தாலே நடைப்பயிற்சி மேற்கொள்வது அவசியம். ஆரம்பத்தில் 20 நிமிடம் நடந்தால் போதும். பின்னாளில் நேரத்தை சற்று அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

நீரிழிவு நோய்க்கான மருந்து, மாத்திரை எடுத்துக்கொண்ட உடனேயே நடக்க ஆரம்பிக்கக்கூடாது. சிறிது நேரம் கழிந்த பின்னரே நடக்க வேண்டும். நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் கூட நல்ல பயிற்சிதான்.

நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய் சம அளவு எடுத்து இலேசாக கொதிக்க வைத்து, கொதி நிலையில் கறிவேப்பிலையை போட்டு இறக்கி பாட்டிலில் வைத்துக்கொண்டு தினமும் அதிகாலையில் நடைபயிற்சி செய்யும் முன் கால் மூட்டுகளிலிருந்து, கீழ்த் தசைப் பகுதி மற்றும் பாதங்கள் வரை பூசிக்கெண்டு நடைபயிற்சி செய்ய வேண்டும். அதுபோல் நடைபயிற்சி முடிந்த பின் உள்ளங்கால் பகுதியில் சிறிது எண்ணெய் தடவி வரவேண்டும். இவ்வாறுசெய்து வந்தால் கால்களில் உணர்ச்சியற்ற பகுதிகள் மற்றும் கால் வலி போன்றவை நீங்கி புத்துணர்வு பெறும். கால்களில் இரத்த ஓட்டம் சீராகும்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...