Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 03, 2010

திறப்புவிழாவிற்கு தயாராகும் மதுரை பன்னாட்டு விமானநிலையம்

பெருங்குடி : மதுரை பன்னாட்டு விமானநிலைய புதிய டெர்மினல் கட்டடம் திறப்பு விழாவிற்கு தயாராகி வருகிறது.மதுரைக்கு பெரிய ரக விமானம் மற்றும் சரக்கு விமான போக்குவரத்திற்கான வசதி இல்லை. இதனால், வெளிநாட்டு விமான போக்குவரத்திற்கும் வசதி இல்லாமல் இருந்தது. விமானநிலையங்களை விரிவாக்கும் திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாயில், ரன்வே விரிவாக்கும் பணி, பெரிய விமானங்களை நிறுத்த "ஏப்ரன்', பிரச்னைக்குரிய விமானங்களை தனியாக நிறுத்தி சோதனை செய்ய "ஐசோலேடட் பாஸ்' மற்றும் பன்னாட்டு விமானநிலையத்திற்கான புதிய டெர்மினல் கட்டடம் கட்டும் பணிகள் நடந்தன.
டெர்மினல் கட்டட பணி தவிர மற்ற பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகின்றன. புதிய கட்டடத்தில் "சென்சார் சிஸ்டம்' பொருத்தப்பட்டு, பயணிகள் இருப்பதற்கேற்ப செயல்படும் விளக்கு, மின்விசிறி, ஏ.சி., வசதி செய்யப்பட்டு உள்ளன. அறைகளில் புகை, தீ இருந்தால், எச்சரிக்கை மணி அடித்து, தீயணைப்புதுறையை அழைக்கும் "அலார்மிங்' வசதியும் உள்ளது. பத்து நாட்களுக்கு முன் மதுரை வந்த விமானபோக்குவரத்து துறை அமைச்சர் பிரபுல் படேல், டெர்மினல் கட்டடத்தை பார்வையிட்டார். பின், 15 நாட்களில் திறப்புவிழா நடத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதன்படி, தற்போது பணிகள் முடிந்து, திறப்பு விழாவிற்கு டெர்மினல் கட்டடம் தயாராகி வருகிறது. ஆக.16ல் திறக்கப்படலாம், என எதிர்பார்க்கப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...