Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 03, 2010

117 ஆண்டுகளாக மூடிக்கிடந்த மசூதியில் சிறப்பு தொழுகை

வேலூர் : வேலூர் அருகே, 117 ஆண்டுகள் மூடிக்கிடந்த, 400 ஆண்டு பழமையான மசூதியில், நேற்று முன்தினம் சிறப்பு தொழுகை நடந்தது. வேலூர் மாவட்டம், ஆற்காடு பெரிய அசேன் புறா பைபாஸ் ரோடு, புதிய ரயில்வே மேம்பாலம் அருகே, 400 ஆண்டு பழமையான, "அசரத் சையத் ஷாபித் அலி ஷா' மசூதி உள்ளது. மசூதியை சுற்றியுள்ள 10 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, கடந்த 117 ஆண்டுகளாக, தொழுகை நடத்தப்படாமல் மூடிக் கிடந்தது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக ஆற்காடு நகர நிர்வாகிகள் மற்றும் ஜமாத் நிர்வாகிகள், கடந்த ஒரு மாதமாக, மசூதியை திறந்து தொழுகை நடத்த முயற்சி மேற்கொண்டனர். தனியார் ஆக்கிரமிப்பிலிருந்த மசூதிக்கு சொந்தமான நிலம் மீட்கப்பட்டு, சீரமைப்பு செய்யப்பட்டு, நேற்று முன்தினம் மாலை, சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா பேட்டை, வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து, ஆயிரக்கணக்கான முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...