Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஆகஸ்ட் 25, 2010

பாபர் மசூதி தீர்ப்பு? பிரதமர் ஆலோசனை


அயோத்தி நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கில் அடுத்த மாதம் அலகாபாத் நீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்க உள்ளது. தீர்ப்பை தொடர்ந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.

உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி கடந்த 1992ஆம் ஆண்டு, டிசம்பர் 6ஆம் தேதி இடிக்கப்பட்டது. பாபர் மசூதி இருந்த இடம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நடத்து வருகிறது. இந்த வழக்கின் தீர்ப்பு அடுத்த மாதம் வெளியாக உள்ளது.

இந்த தீர்ப்பை தொடர்ந்து உருவாகும் நிலையை எதிர்கொள்வது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, அந்தோணி, ப.சிதம்பரம் ஆகியோருடன் ரகசிய ஆலோசனை நடத்தினார்.

இதனிடையே தீர்ப்பை தொடர்ந்து எழும் பிரச்சனைகளை எதிர்கொள்ள உத்திரப்பிரதேச அரசும் திட்டம் வகுத்துள்ளது. இதுகுறித்தும் விவாதிக்கப்பட்டதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...