Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

பிப்ரவரி 07, 2013

சவூதி அரசுக்கே தெரியாமல் அமெரிக்கா இயக்கிய உளவு விமானப்படை தளம்!

டெஹ்ரான்: சவூதி அரேபியாவில் அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ. ஆளில்லா உளவு விமான நிலையத்தை ரகசியமாக நிர்வகித்து வந்ததாக வெளியாகி இருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சவூதியில் கடந்த 2 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்ட இந்த ஆளில்லா விமானம் மூலம்தான் அல் கொய்தா மூத்த தலைவரான அன்வர் அல்-அவ்லாகி கடந்த 2011 செப்டம்பர் மாதம் கொல்லப்பட்டார் என்பதும் தெரியவந்துள்ளது.

1991-ம் ஆண்டு வளைகுடா போருக்காக சவூதி அரேபியாவிற்கு சென்ற சுமார் 10 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்கள் 2003ம் ஆண்டுதான் அந்த நாட்டை விட்டு வெளியேறினர். தற்போதும் அங்கு அமெரிக்க ராணுவ பயிற்சி மையம் மட்டுமே அதிகாரபூர்வமாக இயங்கி வருகிறது. ஆனால் இந்த மையத்தில் சவூதி அரேபியா அரசுக்கே தெரியாமல் ஆளில்லா விமான நிலையத்தை சி.ஐ.ஏ. ரகசியமாக நிர்வகித்து வந்திருக்கிறது.
-oneindia.com 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...