Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 29, 2014

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய கட்டணம்: அதிகாரி விளக்கம்

சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்டமாக வரும் அக்டோபர் மாதம் இறுதியில் கோயம்பேடு – ஆலந்தூர் இடையே 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு பறக்கும் பாதையில் போக்குவரத்து தொடங்க உள்ளது. கோயம்பேடு – ஆலந்தூர் இடையே சோதனை ஓட்டமும் தொடங்கிவிட்டது. இந்த பாதையில் தெற்கு ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் அக்டோபர் மாதம் சோதனை நடத்த உள்ளார். அவர் அறிக்கை கிடைத்ததும் மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடக்க விழா தேதி இறுதி செய்யப்படும். 

இதற்கிடையில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்வதற்கான கட்டணம் இறுதி செய்யப்பட்டு, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் 3 இயக்குனர்கள், தமிழக நிதித்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள், டெல்லி மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சக அதிகாரி ஆகியோரை கொண்ட கட்டண நிர்ணயக் குழு பல கட்டங்களாக ஆலோசனை நடத்தி மெட்ரோ ரயில் கட்டணத்தை இறுதி செய்துள்ளது. அதன்படி

சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரை செல்ல (24 கி.மீ.) ரூ. 40 கட்டணம்
நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச கட்டணம் ரூ.10. அதற்கு அடுத்ததாக ரூ.15, ரூ.20, ரூ.25, ரூ.30 என முழுத் தொகையாகவே கட்டணம் வசூலிக்கப்படும். சென்னை மெட்ரோ ரயிலுக்கான கட்டண விவரம் அதிகாரப்பூர்வமாக ஆகஸ்டு மாதம் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார். (டி.என்.எஸ்)

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...