Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 02, 2014

கொள்ளுமேட்டில் தொடரும் சதிவேலைகள்!! சலாமத் புது நகரில் தீ விபத்து

 கொள்ளுமேடு சலாமத் புது நகரில் இருக்கும் மர்ஹூம் கரிகடை அன்வர் அவர்களின் வீடு நள்ளிரவு 1 மணிக்கு மர்ம நபர்களால் எரிக்கப்பட்டது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானயின. இந்த கொடூர வேலையை செய்பவர்கள் அல்லாஹ்விற்கு அஞ்சிக்கொள்ளட்டும்!

கடந்த சில வருடங்களாகவே நமதூரில் பல்வேறு அசம்பாவிதங்கள் நடந்துகொண்டே வருகின்றது இதுவரையிலும் உண்மையான குற்றவாளிகள் யார் என்பது மர்மமாகவே இருந்துவருகிறது .நாமும் சில நாட்களுக்கு ஆக்ரோசமாக பேசிவிட்டு மறந்துவிடுகின்றோம்.நிச்சயமாக உண்மையான ஒரு முஸ்லிம் இதுபோன்ற அடுத்தவரின் சொத்துகளுக்கு நாசம் விளைவிக்கும் வேலையை செய்யமாட்டார்கள்.அதே சமயம் ஊர் மக்களிடையே ஒற்றுமை இல்லாத இந்த தருணத்தில் காவி பயங்கரவாதிகள் ஏதேனும் ஊடுருவி உள்ளார்களா என்ற கண்ணோட்டத்திலும் நாம் அணுக வேண்டும்.எப்படியாக இருந்தாலும் நாளை அல்லாஹ்வின் முன் நிச்சயமாக விசாரணையை எதிர்கொண்டே ஆகவேண்டும்.

அல்லாஹ்வின் வேதனை கடுமையானது.(அல்குரான் 22:2) மறுமையின் வேதனை மிக பெரியது.(அல்குரான் 68:33) மறுமையின் வேதனை நிலையானது( அல்குரான் 20:127)



படங்கள்:முஹம்மது ரஜ்வீ (நமது செய்தியாளர் )

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...