Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜூன் 07, 2010

"பெப்ஸில்" தவளை மிதப்பு....!

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டையை அடுத்த பு.முட்லூரைச் சேர்ந்த வக்கீல் குமஸ்தா அஸ்கர்அலி (36). இவரது வீட்டிற்கு விருந்தினர்கள் வந்ததால் நேற்று காலை எம்.ஜி.ஆர்.இ சிலை அருகில் உள்ள பேக்கரி ஒன்றில், 500 மிலி., 'பெப்சி' பாட்டில் வாங்கினார்.அதிக, 'கூலாக' இருந்ததால் கையில் வைத்து குலுக்கிய போது பாட்டிலினுள் ஏதோ கிடப்பது தெரிந்தது. 'பெப்சி' பாட்டிலுக்கு பில் வாங்கிக் கொண்டு, அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் உள்ள ஆய்வகத்திற்குச் சென்று சோதனை செய்ததில் பாட்டிலினுள், தவளை இறந்து கிடப்பது தெரிந்தது. மூடி சீல் வைக்கப் பட்ட குளிர்பான பாட்டிலில், தவளை இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அஸ்கர்அலி கூறுகையில்,‘குளிர்பானத்தை வாங்கி குடிப்பதற்காக திறக்க முயன்றபோது தவளை இருப்பதை கவனித்தேன். குளிர்பான நிறுவனத்தின் இதுபோன்ற தவறால்,தாகம் தீர்க்கும் குளிர்பானம் விஷமாக மாறிவிடும் அபாயம் நிலை உள்ளது‘ என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...