Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜனவரி 29, 2014

வீராணம் ஏரியில் திடீர் உடைப்பு விளைநிலங்கள் நீரில் மூழ்கின இரவோடு இரவாக சீரமைப்பு!

காட்டுமன்னார்கோவில்:கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி மூலம் சுமார் 48 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகிறது. இந்த ஏரியில் இருந்து சென்னைக்கும் குடிநீர் அனுப்பப்படுகிறது. வீராணம் ஏரிக்கு கீழணையில் இருந்து வடவாறு வழியாக தண்ணீர் அனுப்பப்படுகிறது.

ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி. ஒவ்வொரு ஆண்டும் விவசாய பணிகள் முடிந்தவுடன் கோடை காலத்தை முன்னிட்டு சென்னைக்கு குடிநீர் அனுப்பப்படுகிறது. அதற்காக ஏரியின் முழு கொள்ளளவு தண்ணீர் தேக்குவதில் பொது பணித்துறையினர் ஈடுபடுவது வழக்கம். இந்த ஆண்டும் கடந்த சில தினங்களாக ஏரியின் முழு கொள்ளளவு தண்ணீர் நிரப்புவதற்காக அதிக அளவு தண்ணீர் தேக்கினர். இதனால் ஏரியின் நீர்மட்டம் 46.95 அடியாக உயர்ந்தது. நீர்மட்டம் அதிகமானதால் தண்ணீர் வெளியேறி வெட்டுவாய்க்காலில் சென்றது. அதிக அளவு தண்ணீர் சென்றதால் எதிர்பாராதவிதமாக கரை உடைந்தது. இதனால் ஏரி தண்ணீர் வெளியேறி மடப்புரம் பகுதியில் உள்ள விளை நிலங்களில் தேங்கியது.

உளுந்து, பயறு விதைக்கப்பட்டுள்ள நிலங்களில் தண்ணீர் தேங்கியதால் விவசாயிகள் கவலையடைந்தனர். மேலும் வயல்களில் கால்நடைகளுக்காக வைத்திருந்த வைக்கோல்களும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. உடைந்த கரையை மணல் மூட்டைகள் கொண்டு அடைக்கும் பணியில் விவசாயிகள்
ஈடுபட்டனர். ஆனால் தண்ணீர் அதிக அளவு வெளியேறியதால் கரை உடைப்பு அதிகமானது. இது பற்றி பொதுப்பணித்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் பொக்லைன் இயந்திரம் மூலம் இரவோடு இரவாக வாய்க்கால் கரை உடைப்பை அடைத்து பாதிப்பை சரிசெய்தனர். அடிக்கடி ஏற்படும் இந்த பிரச்னையில் பொதுப்பணித்துறை நிரந்தர தீர்வு காண வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
source :tamilmurasu

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...