Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

ஜனவரி 04, 2014

காட்டுமன்னார்கோவில் பகுதியில் வாக்கு சாவடி மையங்கள் ஆய்வு!

காட்டுமன்னார்கோவில், : காட்டுமன்னார்கோவில் பகுதியில் பாராளுமன்ற தேர்தலுக்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி வட்டாட்சியர் அலுவலகத் தில் செயல்படும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் தொடங்கி செயல்படுத்தி வருகின்றனர். காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதியில் 236 வாக்குசாவடி மையங்கள் உள்ளது. இவை 23 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஆய்வு பணி கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும் குடிநீர் சுகாதாரம், மின் வசதி, கட்டிடங்களின் தரம், இணைய தள வசதி, தொலைபேசி வசதி, மாற்று திறனாளிகள் வாக்களிப்பதற்கு ஏதுவாக சாய்வு தளங் கள் உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஆய்வில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல துணை வட்டாட்சியர்கள் ஆகியோர் ஈடு பட்டு வருகின்றனர். வரும் 6ம் தேதிக்குள் ஆய்வு பணியை முடித்து அறிக்கை அனுப்ப தேர்தல் ஆணை யம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான பணிகள் தீவிர மாக நடைபெற்று வருகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...