Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

செப்டம்பர் 06, 2012

கண்ணியம் காத்த ஈரான் விளையாட்டு வீரர்!

லண்டன்: லண்டனில் பாராலிம்பிக் போட்டி பரிசளிப்பு விழாவில் மாற்றுத் திறன் வீரர் ஒருவர் இளவரசி கேத் மிடில்டனுடன் கைகுலுக்க மறுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் மாற்றுத் திறன் வீரர்களுக்கான பாராலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் சாதனை படைத்த வீரர்களுக்கு பரிசளிக்கும் விழா கடந்த ஞாயிறன்று நடந்தது. பிரிட்டிஷ் அரச குடும்பம் சார்பில் ஜூனியர் இளவரசர் வில்லியமின் மனைவி கேத் மிடில்டன் கலந்து கொண்டார். வீரர்களுக்கு பரிசுகளையும் பதக்கங்களையும் வழங்கினார். வீரர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் வீரர்களுடன் கைகுலுக்கி பாராட்டுகளையும் தெரிவித்தார். தடகள போட்டியில் ஈரான் வீரர் மெர்டாட் கரம் சேத் (40) என்பவர் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார்.

அவரை பாராட்டி பதக்கத்தை அணிவித்த மிடில்டன், அவருக்கு கைகொடுத்தார். ஆனால் ஈரான் வீரர் கைகுலுக்க மறுத்து பதக்கத்தை பெற்றுக் கொண்டு சென்று விட்டார். விழா மேடையில் நடைபெற்ற இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இதுகுறித்து அரண்மனை வட்டாரங்கள் கூறுகையில், ‘இஸ்லாமிய நாடுகளை சேர்ந்த ஆண்கள் பொது இடங்களில் பெண்களுடன் கைகுலுக்குவதில்லை’ என்றனர்.
-தினகரன் 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...