Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

மே 21, 2010

ரயில் குண்டுவெடிப்பு வழக்கு:குணங்குடி ஹனீஃபா உள்ளிட்ட 8 சிறைவாசிகள் விடுதலை


1997-ம் ஆண்டில் தமிழகத்தில் நடந்த ரயில் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் குணங்குடி ஹனீபா உள்ளிட்ட 8 பேரை விடுவித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.கடந்த 1997-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி சேரன், வைகை, திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில்களில் குண்டுவெடித்தது. இதில் 18 பேர் பலியாகினர். 50 பேர் காயமடைந்தனர்.இந்தக் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. குணங்குடி ஹனீபா உள்ளிட்ட 8 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. விரைந்து தீர்ப்பு வழங்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தன.இந்த நிலையில், இந்த வழக்கிலிருந்து குணங்குடி ஹனீபா உள்ளிட்ட 8 பேரை விடுவித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...