Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

டிசம்பர் 06, 2018

கொள்ளுமேடு வரலாற்றுக் குறிப்பு! ஆக்கம் M.I அன்வர்தீன்

*1971 & 72ஆம் ஆண்டு காலத்தில் உதயமானது கொள்ளுமேட்டில் வெற்றிலை கொடிக்கால் தொழிலாளர் நலசங்கம் கலீலுல்லாஹ் தலைவராக செயல்பட்டார்.

*1973 ஆம் ஆண்டு வரை ஊரில் ஒரே கட்சி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஒரே கொடி பச்சிளம் பிறைக் கொடி!!எந்த கொடியும் பறக்காது, பறக்கவும் கூடாது!!!
*1974 ஆம் ஆண்டு வரை இரண்டு வெற்றிலை மண்டி ஏலக்கடைகள்!!
* 1977 ஆண்டில் உருவான திடீர்குப்பம் ( காட்டுத்தெரு)டாக்டர் பாஷா அவர்களின் முயற்சியால் உதயமானது. 24 மனி நேரத்தில் 75கும் அதிகமான குடிசைகள் போட்டு மக்கள் குடி அமர்த்தப்பட்டனர், நம் மாவட்டமே ஆச்சரியத்தில் திகைத்தது !!
*1978 ஆம் ஆண்டு வரை 5 உரக்கடைகள் அது விவசாயிகளின் பொற்காலம்தான் !! 
*1979 ஆம் ஆண்டு வரை S அப்துல்காதிர் ஜவுளிக்கடை சுற்றுபட்டு ஊர்களும் கொள்ளுமேட்டை நோக்கியே வரும்!!
*1979 ஆம் ஆண்டு வரை விவசாயம் செழிக்க 5 உரக்கடைகள் !!
*1979 ஆம் ஆண்டில் டீக்கடை மட்டும் ஊர் முழுக்க 12 கடைகள் ஊரே திருவிழாப்போல் இருக்கும்!!!
*1982 ஆம் ஆண்டு வரை சிலம்பு ஆட்டம் பயிற்சி வாத்தியார் 4 பேர் இருந்தார்கள்
*1983 ஆண்டில் காயிதேமில்லத் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி தொடக்கம்!
*1983 ஆம் ஆண்டு வரை ராமச்சந்திரன் சாத்தான் தேங்காய் மண்டி!! 
*1984 ஆம் ஆண்டு வரை பஹ்வான் சாப்பாட்டுகடை!! 
*1987வரை S அப்துல் வாஹித் மாவு ஆலை (என் மாமா அவர்களுடையது)
*1987 ஆம் ஆண்டுவரை காலை 6 மணிக்கெல்லாம் கடைத்தெரு
பெரும் கூழித் தொழிலாளிகளால் நிறைந்து இருக்கும் கலியமலை விருதாங்கநல்லூர், கந்தகுமாரம், நத்தமலை,திருச்சின்னபுரம்,மானியம் ஆடூர், இராயநல்லூர் அகரம் கொத்தங்குடி,சிவக்கம் இன்னும் பல ஊர் தொழிலாளிகள் தினம் வேலைக்காக காலை ஆறு மணிக்கெல்லாம்  காத்து இருந்த காலம்!!
*1988 ஆம் ஆண்டு வரை சின்ன குஞ்சி கொள்ளன்பட்டரை!!
*1988 ஆம் ஆண்டு வரை ராமச்சந்திரன் பத்தர் நகை பட்டரை!!
*1998 ஆம் ஆண்டு வரை கிருஷ்னமூர்த்தி நெல் அரவை பிளவர் மில்!!
*1989 அமானுல்லாஹ் மாவுமில் !!
*1998 வரை 4 விறகுகடைகள் அதில் மர்ஹும் அப்துல் மஜீத் அவர்கள் கடை மட்டும் பழமை வாய்த பெயர் போன கடை!!!
*2015 வரை ஜமாஅத் சில்லரை மார்கட் போக்கடா பஜார் !!
அன்று பெரிய கடைத்தெருவாக இருக்கும்,அக்கம் பக்கத்து ஊர் மக்கள் பொருட்கள் வாங்க நம் ஊரைத்தேடிதான் வருவார்கள்.
அது ஒரு கனாக்காலம்தான்
நன்றி -M.I அன்வர்தீன் 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...