Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

பிப்ரவரி 09, 2015

கொள்ளுமேட்டில் தீ விபத்து! அதிர்ச்சியில் மக்கள்!

கொள்ளுமேடு கடைத் தெருவில் உள்ள சிறு குடுசை கடைகள் தீயில் எரிந்து சாம்பலானது!சரியாக நள்ளிரவு 2:30 மணியளவில் நடந்த இந்த கோர சம்பவதில் குடிசை கடைகள் அனைத்தும் தீயில் கருகி சாம்பலானது.பொதுமக்கள் தீயை அணைக்க பெரும் முயற்சி செய்தும் கடைகள் எதையும் காக்க முடியவில்லை.

 தொடர்ச்சியாக நடைபெறும் இது போன்ற தீ விபத்து? சம்பவங்களால் கொள்ளுமேடு மக்கள் பெரும் குழப்பத்தில் இருகின்றனர். இவ்விபத்துகள்  தானாக நடைபெறுகின்றனவா அல்லது ஏதும் சதி  வேலைகள் இருக்குமா என்ற அச்சம் எழுகின்றது. இந்த சம்பவத்தில் காவல்துறை சரியான முறையில் செயல்பட்டு மக்களின் அச்சத்தை போக்கவேண்டும் என்று கொள்ளுமேட்டுவாசிகள் பெரும் ஆவலுடன் எதிர்பார்கின்றனர்.

இவ்விபத்தில் பாதிக்கப்பட்ட அணைத்து கடை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கும் அல்லாஹ் பொறுமையையும் பெரும் பொருளாதாரத்தையும் கொடுப்பானாக என்று கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ் பிரார்த்திக்கும் அதேவேளையில். இதில் ஏதேனும் சதிவேலைகள் இருந்தால் அதில் ஈடுபட்டவர்களுக்கு அல்லாஹ் நேர்வழியை காட்டுவானாக என்றும் பிரார்திகின்றோம். அனைத்தையம் அறிந்தவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே.

- அபூ தனாஸ் கொள்ளுமேடு 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...