Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

செப்டம்பர் 19, 2014

காட்டுமன்னார்குடி பகுதியில் விதிகளை மீறி இயக்கப்பட்ட வாகனங்கள் பறிமுதல்!

காட்டுமன்னார்குடி பகுதியில் விதிகளை மீறி இயக்கப்பட்ட 9 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 

வாகனங்கள் பறிமுதல் காட்டுமன்னார்கோவில் பகுதியில் சரக்கு வாகனங்களில் பொதுமக்கள் ஏற்றிச்செல்லப்படுவதாக சிதம்பரம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்துக்கு புகார்கள் சென்றது. அதன்பேரில் மோட்டார் வாகன ஆய்வாளர் சத்தியகுமார் மற்றும் அலுவலர்கள் காட்டுமன்னார்கோவில் பஸ் நிலையம், கச்சேரி ரோடு, உடையார்குடி ஆகிய பகுதியில் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்றிச்சென்ற 4 மினிடெம்போக்களை மோட்டார் வாகன ஆய்வாளர் பறிமுதல் செய்தார். மேலும் ஓட்டுனர் உரிமம், செல்போன் ஓட்டிக்கொண்டு வாகனம் ஓட்டியது உள்பட போக்குவரத்து விதிகளை மீறியதாக 2 ஆட்டோக்கள், 2 மோட்டார் சைக்கிள்கள், ஒரு டிராக்டர் என மொத்தம் 9 வாகனங்கள்
பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வாகனங்கள் காட்டுமன்னார்கோவில் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

தங்களின் வருகைக்கு நன்றி...