Ads 468x60px

தங்களை இனிதே வரவேற்கிறது கொள்ளுமேடு எக்ஸ்பிரஸ்...அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நவம்பர் 27, 2013

உலக வர்த்தக கண்காட்சி 2020 : துபையில் நடைபெறுகிறது!!

அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட எக்ஸ்போ-2020 துபையில் நடைபெறவுள்ளது. இதற்கான தகுதி சுற்றுகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்றது.

மொத்தம் ஏழு நாடுகள் பங்கேற்றன, இறுதியாக நடைபெற்ற போட்டியில் ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி துபாய் முதல் இடம் பிடித்தது.168 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட Bureau International des Expositions என்ற அமைப்பு 2020ம் ஆண்டில் World Expo 2020 நடக்கப் போகும் நகரத்தைத் தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பை நடத்தியது. பாரிசில் OECD சென்டரில் வைத்து இந்தத் தேர்தலில் மொத்தம் 3 சுற்று வாக்கெடுப்புகள் நடைபெற்றன. இதனால் அமீரகம் எங்கும் இந்த வெற்றியை வரவேற்று கொண்டாடங்கள் நடைபெறுகின்றன. 2020ஆம் ஆண்டு நடைபெறும் இந்த உலக வர்த்தக கண்காட்சி மூலம் மத்திய கிழக்கு

நவம்பர் 26, 2013

பயிர் காப்பீடு கோரி மறியல்: 110 விவசாயிகள் கைது!

காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி சிதம்பரம் அருகே உள்ள குமராட்சியில் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 110 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

கடந்த ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு தமிழகஅரசே காப்பீடு தொகையைச் செலுத்தியது. இதில் 50 சதவீதத்துக்கு மேல் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரமும், 50 சதவீதத்துக்கு கீழ் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு பயிர் காப்பீடு மூலம் இழப்பீடு வழங்கப்படும் எனவும் தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்தார். ஆனால் காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் 1109 ஹெக்டேர் நிலங்களுக்கு மட்டும் ரூ.15 ஆயிரம் வீதம் காப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது. தற்போது காட்டுமன்னார்கோவில் வட்டம் குமராட்சி பகுதிக்கு ரூ.4 லட்சத்துக்குக் குறைவான தொகையை விவசாயிகளுக்கு பயிர் காப்பீடுத் தொகை வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீடு இழப்பீடுத் தொகையை வழங்க வேண்டும் என வலியுறுத்தி

காட்டுமன்னார்கோவிலில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் குவிந்தன!

காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவு செயல்படுகிறது. இந்த பிரிவின் கீழ் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

கடந்த மாதம் வரை 18 வயது நிரம்பியவர்களிடம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பங்கள் அளிக்க தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. இதன்படி எட்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கிராம நிர்வாக அலுவலர், வாக்குச்சாவடி நிலைய அலுவலர், மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்பங்களை அளித்தனர். இணைய தளத்திலும் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை கணினியில் பதிவு செய்யப்பட்டது. இவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தையும் சரிபார்க்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. விண்ணப்பத்தில்

நவம்பர் 22, 2013

காட்டுமன்னார்குடியில் பொது இடங்களில் புகைபிடித்தவர்களுக்கு அபராதம்!

காட்டுமன்னார்குடி பகுதியில் உள்ள கடைகளில் புகையிலை எதிர்ப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதா? என ஆயங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சிவானந்தம் தலைமையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தம்பா, சுகாதார ஆய்வாளர்கள் பிச்சைபிள்ளை, குழந்தைவேலு, ஹரிகரன் ஆகியோர் அடங்கிய சுகாதாரக்குழுவினர் நேற்று மாலை அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, பஸ் நிலையம், கச்சேரி தெரு பகுதிகளில் புகையிலை எதிர்ப்பு வாசக விளம்பர பதாகைகள் வைக்காத 12 கடை உரிமையாளர்களுக்கு ரூ.1700–ஐ அபராத தொகை வசூலித்தனர். அதைத்தொடர்ந்து, பொது இடங்களில் புகைபிடித்த 3 நபர்களுக்கு தலா ரூ.300 வீதம் அபராத தொகை வசூல் செய்தனர்.
source:தினத்தந்தி

நவம்பர் 21, 2013

ஐரோப்பாவில் முதல் இஸ்லாமிய அரசியல் கட்சி!

நவீன ஐரோப்பாவின் வரலாற்றிலேயே முதலாவது இஸ்லாமிய அரசியல் கட்சி உருவாகிறது. கட்சியை ஆரம்பிப்பவர் யார் என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். நபி (ஸல்) அவர்களையும் இஸ்லாத்தையும் கடுமையாகக் கொச்சைப்படுத்தி சினிமாப் படம் எடுக்க மூளையாகச் செயல்பட்ட அதே Arnaud Van Doom தான்.

ஹாலந்து நாட்டைச் சேர்ந்த இவர் ஐரோப்பாவில் இஸ்லாமிய அரசியல் கட்சியொன்றைத் தொடங்கும் முதல்கட்டப் பணிகளை முடித்துவிட்டார். இதுதான், இஸ்லாமிய அடிப்படையில் ஐரோப்பாவில் தொடங்கப்படும் முதலாவது அரசியல் கட்சியாகும். இக்கட்சி ஐரோப்பிய குடிமகனுக்கு இஸ்லாத்தின் மகிமையை எடுத்துச்சொல்லும் என்கிறார் Arnaud. இஸ்லாத்தின் மீது தீவிர எதிர்ப்பு சிந்தனை கொண்ட ஹாலந்து சுதந்திரக் கட்சியின் (PW) முன்னாள் பிரதிநிதி ஆவார் இவர். இக்கட்சிதான், இஸ்லாத்திற்கெதிரான திரைப்படம் தயாரிக்கப் பின்னணியில் இருந்து எல்லா உதவிகளையும் செய்தது. இவர் நபி (ஸல்) அவர்களின் உண்மையான வாழ்க்கை வரலாற்றைப் படித்து மனம் மாறினார்; மதமும் மாறினார்.

முஸ்லிமானபின், ஹாலந்தில் மட்டுமன்றி, முழு ஐரோப்பாவிலும் நபியவர்களின் மேன்மை குறித்த பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார். இப்போது முஸ்லிம் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். ஐரோப்பா எங்கும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் தமது கட்சி சேவை செய்யும் என்று கூறுகின்ற Arnaud. முஸ்லிம்களைக் கணிசமான எண்ணிக்கையில் தம் கட்சியில் சேர்க்கப்போவதாக அறிவித்துள்ளார். முஸ்லிம்களுடன் நல்லுறவு பாராட்டிவரும் நண்பர்களையும் உறுப்பினர்களாக்க முயல்வேன் என்கிறார். வரும் நாட்கள், இஸ்லாத்தைப் பற்றிய புரிதலைச் செய்யும் பணியில் அதிகப் பங்களிப்பைக் காணும். அதற்காக ‘மனிதகுலத் தலைவர் முஹம்மத்’ எனும் ஒரு படம் தயாரிக்கப்போகிறேன். ஐந்து மொழிகளில் இப்படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளேன். இதற்கு கனடாவில் உள்ள தாவா சென்டர் உதவ முன்வந்துள்ளது.

அத்துடன் நபிகளாரின் வரலாற்று நிகழ்வுகளைக் கூறும் தொகுப்பு ஒன்றை உருவாக்கி, ஐந்து மொழிகளில் மொழிபெயர்த்து, ஐரோப்பிய நாடுகளில் அதிகமானோர் கையில் சேர்க்க எண்ணியுள்ளேன் –என்றார் அவர். ‘எதிர்ப்பில் வளர்ந்த மார்க்கம் இஸ்லாம்’ என்பது எவ்வளவு உண்மை பார்த்தீர்களா? சத்தியம் அப்படித்தான்! இது நபிகளார் காலத்திலிருந்தே தொடரும் உண்மை!
thanks:khanbaqavi.blogspot

நவம்பர் 17, 2013

சச்சினுக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு!

கிரிக்கெட்டில் பல்வேறு உலக சாதனைகளை ஏற்படுத்தி நாட்டிற்கு பெருமை தேடித்தந்தவர் சச்சின் டெண்டுல்கர். 24 ஆண்டுகாலம் இந்திய அணிக்காக விளையாடிய அவர் தனது 200-வது டெஸ்ட் போட்டி முடிந்ததும் இன்று ஓய்வு பெற்றார்.

இந்நிலையில், விளையாட்டில் சாதனை படைத்த சச்சின் டெண்டுல்கரை கவுரவிக்கும் வகையில் அவருக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க பிரதமர் மன்மோகன்சிங் பரிந்துரை செய்து, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இதனை பரிசீலனை செய்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதாக இன்று அறிவித்தார். ஓய்வு பெற்ற நாளிலேயே சச்சினுக்கு இந்த விருது அறிவிப்பு வெளியானது குறிப்படத்தக்கது. இதேபோல் வேதியியல் விஞ்ஞானி சி.என்.ஆர். ராவுக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி மாளிகை அறிவித்துள்ளது. இதன்மூலம் பாரத ரத்னா விருதை பெறும் முதல் விளையாட்டு வீரர் என்ற பெருமையை சச்சின் பெற்றுள்ளார்.

மிக குறைந்த வயதில் பாரத ரத்னா விருதைப் பெற்றவர் என்ற பெருமையையும் சச்சின்

நவம்பர் 16, 2013

கடலூர் மாவட்டத்தில், அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை!

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, மேலும் வலுவடைந்து உள்ளதால் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து கலெக்டர் கிர்லோஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக கலெக்டர் கிர்லோஷ்குமார் அவரது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக அனைத்து அரசு ஊழியர்களும் விடுப்பில் செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பொதுமக்கள் தங்குவதற்காக பள்ளிக்கூடம், புயல்பாதுகாப்பு மையம், சமுதாய நலக்கூடம் ஆகியவற்றை சீரமைத்து

நவம்பர் 14, 2013

அப்துல் நாஸர் மஃதனியை விடுவிக்க மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை!

புதுடெல்லி: மூன்று ஆண்டுகளாக அநியாயமாக பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேரள மாநில பி.டி.பி. கட்சியின் தலைவர் அப்துல் நாஸர் மஃதனியை விடுதலை செய்ய வேண்டும் என்று டெல்லியில் மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தான் செய்த குற்றம் என்னவென்று தெரியாமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிரபராதிகளின் சின்னமே அப்துல் நாஸர் மஃதனி என்று ஜாமிஆ டீச்சர்ஸ் சோலிடாரிட்டி அசோசியேஷனின் பிரதிநிதி மனீஷா சேத்தி கூறியுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் போலீஸ் ரிக்கார்டில் எவ்வித குற்றங்களும் செய்ததாக பதிவு செய்யப்படாத 80க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிமி இயக்க உறுப்பினர் என்பதுதான் இவர்கள் மீதான குற்றம் என்று அவர் கூறினார்.

ஜோடிக்கப்பட்ட வழக்குகளின்

வேகமாக பரவும் கோமாரி நோய் ஆட்சியர் அவசர ஆலோசனை!

காட்டுமன்னார்கோவில், : கடலூர் மாவட்டத்தில் கால்நடைகள், கோமாரி நோயால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மாவட்டத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைகளுக்கு தினந்தோறும் 100க்கும் மேற்பட்ட கால்நடைகள் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்படுகின்றன.

இந்நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகள் வாய், கால் உள்ளிட்ட பகுதியில் புண்கள் ஏற்பட்டு அவதிப்பட்டு வருகிறது. இதனால் கால் நடைகள் உணவுகளை சாப்பிட முடியாமலும், நடக்க முடியாமலும் உள்ளன. தற்போது மருந்து, மாத்திரைகளுக்கு அரசு மருத்துவமனைகளில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கால்நடை வளர்ப்போர், தனியார் மருந்து கடைகளில் அதிக விலை கொடுத்து மருந்துகளை வாங்கி செல்கின்றனர். சிதம்பரம்: சி.வங்கார மாரி, காட்டுக்கூடலூர், நாஞ்சலூர், வடமூர், செட்டிமுட்டு, இளநாங்கூர், சிவாயம், மணலூர், சிலுவைபுரம், பூலமேடு, வல்லம்படுகை, அம்மாபேட்டை,

கடலூர் மாவட்டத்தில் அறிவிக்கப்படாத மின்தடையால் அவதிப்படும் பொதுமக்கள்!

கடலூர் மாவட்டத்தில் அறிவிக்கப்படாத மின்தடையால் பொதுமக்கள் மீண்டும் அவதிப்படும் நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தில் தினமும் 24 மணி நேரமும் மின் விநியோகம் இருந்த காலம் போய் கடந்த சில ஆண்டுகளாக மின்சார தடை என்ற நிலை தொடர் கதையாகி விட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகிறார்கள்.

குறிப்பாக சமையல் வேலைகளை செய்து வரும் இல்லத்தரசிகள் மின் சாதனங்களை பயன்படுத்த வழியின்றி தவிக்கின்றனர். அதுமட்டுமல்ல நாட்டின் முதுகெலும்பாக விளங்கி வரும் விவசாய உற்பத்தியும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் வருண பகவானும், வாயு பகவானும் கருணை காட்டியதால் காற்றாலை மற்றும் நீர் மின் உற்பத்தி அதிகரித்து கடந்த சில மாதங்கள் வரை மின்சார தடை இல்லாத நிலை இருந்தது. இதனால் இனிமேல் மின்சார தடை இருக்காது என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில்

நவம்பர் 12, 2013

பாட்னா தொடர் குண்டுவெடிப்பு: இரண்டு முக்கிய காவி பயங்கரவாதிகள் கைது!

பாட்னா தொடர் குண்டுவெடிப்பு சதியில் தொடர்புடைய ராஜு சாவோ என்பவனை ஜார்க்கண்ட் மாநிலம் தன்பத் மாவட்டத்தில் பீகார் போலீசார் கைது செய்துள்ளனர்.

குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி அக்டோபர் 27-ல் பங்கேற்ற பீகார் மாநிலத்தின் பாட்னா பொதுக்கூட்டத்தில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. இதில் 6 பேர் உயிரிழந்தனர். 80க்கும் அதிகமானோர் படுகாயாமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது. இந்நிலையில் ஒரு பெரும் திருப்பமாக குண்டு வெடிப்பை நிகழ்த்திய காவி பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் கோபால்குமார் கோயல், விகாஷ் குமார், பவண் குமார், கணேஷ் குமார் ஆகியோர் பாட்னா தொடர் குண்டுவெடிப்பு

நவம்பர் 11, 2013

சவுதியில் தமிழகத்தை சேர்ந்த 2 ஹாஜிகள் மரணம்!

சௌதி அரேபியாவில் நடந்த கோரமான விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 2 ஹாஜிகள் உள்பட 8 பேர் மரணமடைந்து விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜீவூன்…

ஹஜ்ஜுக்கு வந்த ஹாஜிகள் அந்நாட்டை சுற்றிப்பார்க்க சென்றபோது இக்கோர விபத்து நிகழ்துள்ளது.மரணித்த ஹாஜிகளின் செயல்களை, அமல்களை வல்ல இறைவன் பொருத்திக் கொண்டு மன்னித்து அருள்புரிவானாக.

நவம்பர் 10, 2013

ஜப்பான் உருவாக்கிய ஆட்டோமேட்டிக் கார்!

டோக்கியோ: ஜப்பான் நாட்டில் தயாரிக்கப்பட்ட தானியங்கி காரை ஓட்டி பார்த்து மகிழ்ந்தார் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே.அமெரிக்காவில் சில வாரங்களுக்கு முன்பு தானியங்கி காரை கூகுள் நிறுவனம் சோதனை செய்து பார்த்தது. இந்நிலையில், ஜப்பான் நாட்டில் டொயோட்டா, நிசான், ஹோண்டா ஆகிய நிறுவனங்கள் தானியங்கி கார்களை தயாரித்துள்ளன.

சாலையில் ஏற்படும் விபத்துகளை குறைக்கவும், கவன குறைவால் ஏற்படும் தவறுகளை தடுக்கவும், கூகுள் எர்த் உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி இந்த வகையிலான கார்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் சோதனை முறையில் உள்ள இந்த கார்கள் ஜப்பானில் வர்த்தக முறையில் தயாரிக்கப்பட்டு விட்டதாக ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தெரிவித்தார்.

ஜப்பானின் முன்னணி கார் நிறுவனங்கள் தயாரித்துள்ள தானியங்கி காரில் அமர்ந்தால் போதும். கிளட்ச், கியர், பிரேக், சாலைகளில் ஓட்டம் போன்ற எல்லாவற்றையும் அதுவே பார்த்துக் கொள்ளும். இந்நிலையில், தானியங்கி காரில்

கடலூர் மாவட்டத்தில் ஆதார் அடையாள அட்டை வழங்க நிரந்தர மையம்!

அனைத்து தாலுகாக் களிலும் நிரந்தர மையம் அமைத்து உடனுக்குடன் ஆதார் அடையாள அட்டை வழங்குவதற்கு அரசு முடிவு செய்துள்ளது.இதற்காக புகைப்படம் மற்றும் கைவிரல் ரேகை பதிவு செய்யும் முகாம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது.

முதலில் தபால் அலுவலகத்தில் நடைபெற்று வந்த இந்த பணி பின்னர் நகராட்சி, தாலுகாக்கள் வாரியாக நடைபெற்றது. இதில் புகைப்படம் எடுத்த சிலருக்கு அடையாள அட்டை உடனடியாக வந்தது. ஆனால் பெரும்பாலான மக்கள் அடையாள அட்டை கிடைக்காமல் தவித்தனர். ஆதார் அடையாள அட்டை சாதாரண குடிமகன் என்பதற்கான அடையாளமாக வழங்கப்பட்டாலும் அரசு நலத்திட்ட உதவிகள் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம் என அரசு அறிவித்தது.

ஆதார் அடையாள அட்டைக்காக புகைப்படம் எடுக்க தவறியவர்களுக்கு 2-வது கட்ட முகாம்

நவம்பர் 09, 2013

உடல் எடையை குறைத்தவர்களுக்கு ரூ.5 கோடி தங்கம் பரிசு!

துபாய்,நவ.09 (டி.என்.எஸ்) துபாய் நகர சபை நடத்திய உடல் எடை குறைக்கும் போட்டியில் கலந்துகொண்டு, உடல் எடையை குறைத்தவர்களுக்கு தங்கம் பரிசாக வழங்கப்பட்டது. உடல் எடையை குறைக்கும் போட்டியை துபாய் நகர சபை நடத்தியது. அதில் வெற்றி பெறுபவர்களுக்கு தங்கம் பரிசளிக்கப்படும் என அறிவித்து இருந்தது. அதை தொடர்ந்து உடல் எடையை குறைக்கும் போட்டியில் பலர் கலந்து கொண்டனர்.

அவர்களில் அகமது இப்ராகீம் அல் ஷேக் (27), என்பவர் முதல் பரிசு பெற்றார். சிரியாவை சேர்ந்த கட்டிட கலை நிபுணரான இவர், 26 கிலோ உடல் எடையை குறைத்தார். அவரை தொடர்ந்து ரகுநாத் பாலசுப்பிரமணியன் என்பவர் தனது, 126 கிலோ எடையில் இருந்து 23 கிலோ எடையை குறைத்துள்ளார். இவர்கள் உள்பட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு துபாய் நகரசபை தங்கம் பரிசாக வழங்கியுள்ளது. இப்போட்டியில் வென்றவர்களுக்கு மொத்தம் ரூ.5 கோடி மதிப்புள்ள

காட்டுமன்னார்குடியில் புதிதாக கட்டப்பட்ட கால்நடை மருந்தக கட்டிடம்! தமிழக முதல்வர் திறந்து வைத்தார்

காட்டுமன்னார்குடியில் ரூ.26 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட கால்நடை மருந்தக கட்டிடத்தை காணொளி காட்சி மூலம் தமிழக முதல்–அமைச்சர் திறந்து வைத்தார்.

கால்நடை மருந்தகம் திறப்பு கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.26 லட்சத்தி 66 ஆயிரம் செலவில் புதிதாக கட்டப்பட்ட கால்நடை மருந்தக கட்டிடத்தை தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா காணொளி காட்சி நேற்று திறந்து வைத்தார். அதையொட்டி, காட்டுமன்னார்குடியில் கால்நடை மருந்தக கட்டிடத்தில் நடந்த விழாவுக்கு மாவட்ட கலெக்டர் கிர்லோஷ்குமார் தலைமை தாங்கினார். காட்டுமன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகுமாறன், ஒன்றியக்குழு தலைவர் மணிகண்டன், பேரூராட்சி மன்றத் தலைவர் எம்.ஜி.ஆர்.தாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கால்நடை மண்டல இணை இயக்குநர் (பொறுப்பு) டாக்டர் கணேசன் வரவேற்றார். விழாவில், மாவட்ட கலெக்டர் கிர்லோஷ்குமார் பேசியதாவது:–

கடலூர் மாவட்டத்தில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.5 கோடியே 58 லட்சத்து 60 ஆயிரம் செலவில் பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்டுள்ள அதி நவீன மற்றும் தரம் உயர்த்தப்பட்ட 21 கால்நடை மருத்துவமனைகளை நேற்று தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார். இதன்மூலம், 147 கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 645 கால்நடைகளும்

நவம்பர் 07, 2013

விமான தாக்குதல்களை நிறுத்தாவிட்டால் நேட்டோ படைகளுக்கான பாதைகளை தடுப்போம்-இம்ரான் கான்

ஆளில்லா வேவு விமானங்களைக் கொண்டு நடத்தும் தாக்குதல்களை இந்த மாதத்துடன் நிறுத்தாவிட்டால், நேட்டோ படைகளுக்கான முக்கிய வழங்கல் பாதைகளை தடுக்கப் போவதாக எதிர்கட்சித் தலைவர் இம்ரான் கான் எச்சரித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் நிலைகொண்டுள்ள நேட்டோ படைகளுக்கான பொருட்கள் வழங்கும் பாதை பாகிஸ்தான் வழியாகவே செல்லும் சூழலிலேயே இம்ரான் கானின் இந்த எச்சரிக்கை வந்துள்ளது. பிபிசிக்கு வழங்கிய ஒரு பேட்டியியேயே இம்ரான் கான் இதைத் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானிய தாலிபான்களின் தலைவர் ஹக்கீமுல்லா மெஹ்சூதை கடந்த வாரம் ஆளில்லா வேவு விமானத்தால் கொன்றதன் மூலம், அவர்களுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகளை அமெரிக்கா திட்டமிட்டு சதிசெய்து

எல்லா பெட்ரோல் நிலையங்களிலும் சமையல் எரிவாயு! -மத்திய அரசு

இந்தியாவில் பெட்ரோல் நிலையங்கள் மூலம், 5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்யும் திட்டத்தை நாட்டின் அனைத்து பெட்ரோல் நிலையங்களுக்கும் விரிவுபடுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

சோதனை முயற்சியில் துவக்கப்பட்ட இந்த திட்டத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, அதனை விரிவுபடுத்துவதற்கான அனுமதியை மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி வழங்கியுள்ளார். கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி இந்தியாவில் தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் பெங்களூர் ஆகிய 5 நகரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையங்களில் மட்டும் சிறிய அளவிலான 5 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு விற்பனை துவங்கப்பட்டது. மானியம் இல்லாமல் சந்தை விலைக்கே விற்கப்படும் இவற்றை பெற தனிநபரின் அடையாள அட்டையே போதுமானது எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்த விற்பனைக்கு கிடைத்த நல்ல வரவேற்பை அடுத்து நாடு முழுவதும் உள்ள 47,000 பெட்ரோல் நிலையங்களுக்கும்

மழையால் நீர் வரத்து அதிகரிப்பு: வீராணம் ஏரி மீண்டும் நிரம்புகிறது!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே இருக்கும் வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு 74 கனஅடி தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.5 அடி ஆகும்.

இந்த ஏரிக்கு மழைக்காலங்களில் செந்துரை, ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், அரியலூர், பெரம்பலூர், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய பகுதிகளில் பெய்யும் மழை நீர் செங்கல் ஓடை கருவாட்டு ஓடை வழியாக வரும். சாதாரண காலங்களில் மேட்டு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கீழணை வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வரும். இந்த ஏரியை நம்பி சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகாவை சேர்ந்த சுமார் 80 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி நிலங்கள் உள்ளன. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை கடந்த ஒருவாரமாக பெய்து வருவதால் ஏரிக்கு மழைநீர் வரத்து அதிகமாக உள்ளது. மேலும் காவிரியில் இருந்து வினாடிக்கு 1000 கனஅடி நீர் வீதம் வடவாறு வழியாக திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் நீர்மட்டம் தொடர்ந்து

நவம்பர் 06, 2013

சவூதி நிதாக்கத்: முதல்நாளில் 4915 பேர் கைது!

ஜெத்தா: நவம்பர் 3, 2013 அல்லது துல்ஹஜ் 1434 உடன் சவூதி அரசு அளித்திருந்த பொதுமன்னிப்புக் காலம் முடிவடைந்ததையடுத்து, சட்ட மீறலாகத்தங்கியுள்ள வெளிநாட்டவரைப் பிடிக்கும் பணியை சவூதி காவல்துறை முன்னெடுத்துள்ளது.

நேற்று ஒரே நாளில் ஜெத்தா நகரில் மட்டுமே 4915 பேர் பிடிபட்டுள்ளதாக சவூதியிலுள்ள அரபு நாளேட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆயினும் சவூதி கெஸட் போன்ற ஆங்கில நாளேடுகளில் 1899 பேர் கைது என்றுகூறப்பட்டுள்ளது. எனினும் தலைநகர் ரியாத் நகரில் சோதனைகள், கைதுகள் குறித்த

நவம்பர் 05, 2013

கடலூர் மாவட்டத்தில் அனுமதியின்றி இயக்கப்பட்ட 38 ஆம்னி பஸ்சுக்கு அபராதம்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியார் ஆம்னி பஸ்கள் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை தடுக்க, பயண கட்டண விவரத்தை வெளியிட நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் முறையான சீட் பர்மிட் இல்லாமலும், வரி செலுத்தாமலும் ஆம்னி பஸ்கள் இயக்கப்படுவதாக போக்குவரத்து துறைக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து கடலூர் மாவட்ட போக்குவரத்து அலுவலர் அங்கமுத்து தலைமையில் ஈசிஆர் சாலையில் கடலூர், சிதம்பரத்திலும், சென்னை - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் நெய்வேலி பகுதியிலும், சென்னை & திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூரிலும் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். சென்னை, கோவை, நெல்லை உள்ளிட்ட முக்கிய நகரத்தில் இருந்து கடலூர் மாவட்டத்தை கடந்து சென்ற 422 ஆம்னி பஸ்களில் சோதனை நடந்தது. அவற்றில் 38 பஸ்கள் உரிய வரி செலுத்தாமலும், பர்மிட் இல்லாமலும்

பதிவு செய்யும் பத்திரங்களை 'சிடி' ஆக வழங்கும் புதிய திட்டம் - ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார்

தமிழகத்தில் உள்ள பத்திரப்பதிவு துறை அலுவலகங்களில் பதிவு செய்யும் பத்திரங்களை சிடி ஆக வழங்கும் புதிய திட்டத்தை நாளை (புதன்கிழமை) முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

தமிழ்நாடு அரசுக்கு அதிக வருவாய் பெற்று தரும் அரசுத்துறைகளில் வணிகவரித்துறை மற்றும் மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் இருப்பது பத்திரப்பதிவுத்துறை. குறிப்பாக 2012-2013 ஆம் ஆண்டு பத்திரப்பதிவு துறை ரூ.7,455.41 கோடி வருவாயை ஈட்டி தந்துள்ளது. தற்போது மேலும் இந்த துறையை நவீனப்படுத்துவதுடன், எளிமைப்படுத்தவும் முதலமைச்சர் ஜெயலலிதா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய வருபவர்கள், பத்திரங்களை அலுவலகத்தில் பதிவு செய்யும் போது நடக்கும் நிகழ்வுகள் சிசிடிவி மூலம் பதிவு செய்யப்படுகிறது. பத்திரங்களை பதிவு செய்யவருபவர்கள் தேவைப்பட்டால்

நவம்பர் 04, 2013

புகார்களை அனுப்ப தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணயதளம்!

தமிழக முதலமைச்சர் அவர்களின் தனிப்பிரிவு இணையதளம் மூலம் நம்முடைய கோரிக்கைகள் அல்லது புகார் மனுக்களை அனுப்பலாம்.புகார்களை அனுப்பி விட்டு அதனுடைய நிலவரம் கூட அறியாமல் இருந்த நிலைமாறி இன்று உங்களுடைய கோரிக்கைகளின் நிலை குறித்தும் நீங்கள் அறிந்துகொள்ளும் வகையில் இந்த இணைய தளம் அமைந்துள்ளது.

முதல்வரின் தனி பிரிவிற்கு புகார்களை அனுப்ப உங்களுக்கென ஒரு மின்னஞ்சல் முகவரி மற்றும் அலைப்பேசி இருந்தால் போதுமானது. முதல்வரின் தனிப்பிரிவு தளமான http://cmcell.tn.gov.in/ என்ற

அமெரிக்க இராணுவ கொடூரங்களுக்கு துணைபோகும் மருத்துவர்கள்!

அமெரிக்க இராணுவத்தின் கட்டளைகளை ஏற்று பணியாற்றுகின்ற மருத்துவ நிபுணர்கள், பயங்கரவாத சந்தேகநபர்களை கொடூரமாகவும் இழிவாகவும் நடத்தியுள்ளதாக புதிய அறிக்கை ஒன்று கூறுகிறது.

தேசிய பாதுகாப்பின் பேரில், மருத்துவ ஒழுக்கநெறிகளை மீறிச் செயற்படுமாறு அமெரிக்க இராணுவத்தினரும் புலனாய்வு நிறுவனங்களும் மருத்துவர்களுக்கும் உளவியல் நிபுணர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. நீருக்குள் மூழ்கும் உணர்வை ஏற்படுத்தி மூச்சித்திணறச் செய்து சந்தேகநபர்களை சித்திரவதை செய்யும் வாட்டர்போடிங் போன்ற விசாரணை முறைகள் சட்டரீதியாக தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், மருத்துவப் பணியாளர்கள் இன்னும் அவ்வாறான மோசமான கொடூரங்களை புரியுமாறு பணிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.

தடுப்புக்காவல் கைதிகளை கட்டாயப்படுத்தி, அவர்களின் விருப்பத்துக்கு மாறாக உணவை திணிக்கும் துன்புறுத்தல்கள் குவாந்தனாமோ போன்ற பல சிறைக்கூடங்களில்

நவம்பர் 03, 2013

பாட்னா குண்டுவெடிப்பு: விசாரணையில் மர்மம் நீடிப்பு!!

பாட்னாவில் நரேந்திரமோடி கலந்துகொண்ட பேரணியில் குண்டுவெடித்த சம்பவத்தைக் குறித்த விசாரணையில் நாட்கள் செல்லச் செல்ல மர்மம் அதிகரிக்கிறது. சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்து பிடிக்கப்பட்ட நபர் நேற்று முன் தினம் மரணமடைந்தார். அவரது மரணம் குண்டுவெடிப்பில் ஏற்பட்ட காயத்தால் ஏற்பட்டது என்று போலீஸ் கூறுகிறது.

பீகாரில் தர்பாங்காவில் இருந்து கைதுச் செய்யப்பட்ட மெஹர் ஆலம் என்ற பதின்பருவ வயது நபரைக் குறித்த கதையில் புதிய திருப்பம்ஏற்பட்டுள்ளது. முதலில் ஊடகங்களின் முன்னால் குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளி என்று அறிமுகப்படுத்திய மெஹர் ஆலம் என்ற குளிர்சாதனப்பெட்டி மெக்கானிக், பின்னர் குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் பயன்படுத்தும் இன்ஃபார்மராக மாறியுள்ளார். மெஹர் ஆலம் என்.ஐ.ஏவின் கஸ்டடியில் இருந்து தப்பி பின்னர் பிடிபட்டதாக செய்தி வெளியானது. இதன் பின்னர் மெஹர் ஆலம் போலீஸ் இன்ஃபார்மராக கூறப்படுகிறார். ஆனால், என்.ஐ.ஏவின் கூற்றை மெஹர் ஆலத்தின் தந்தை மஹ்மூத் ஆலம் மறுக்கிறார். நண்பருடன் சொந்தக் கிராமமான சிதவுளியில் இருந்து தர்பாங்காவிற்கு செல்லும் வழியில் கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி(பாட்னா குண்டுவெடிப்பிற்கு முன்பு) மெஹரை என்.ஐ.ஏ அதிகாரிகள்

குளிர்பானங்கள் நீரழிவு நோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கிறது! ஆய்வில் தகவல்!

மனித வாழ்க்கையில் முக்கிய அம்சமாக மாறிவிட்ட குளிர்பானங்கள் (Soft Drinks) நீரழிவு நோய்க்கான வாய்ப்பை அதிகரிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

உடலுக்கு அதிகமான அளவில் சர்க்கரை கிடைப்பது குளிர்பானங்கள் மூலமாகும். இக்காரியத்தில் ஐஸ்க்ரீம், மிட்டாய்களை குளிர்பானங்கள் பின்னுக்குத் தள்ளிவிட்டது. க்ரெடிட் நியூஸ் ரிசர்ச் இன்ஸ்ட்யூட் நடத்திய ஆய்வு இதனை தெரிவிக்கிறது. ஒரு கப் குளிர்பானத்தில் எட்டு ட்யூஸ்பூன் சர்க்கரை அடங்கியிருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இது மனித உடலில் சாதாரணமாக இருக்கவேண்டிய சர்க்கரையின் அளவை விட அதிகமாகும். உடல் பருமனுக்கும் காரணம் குளிர்பானங்கள்தாம் என்று சுகாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். சர்க்கரை திரவ நிலையில் உடலுக்குள் சென்றால் விரைவாக உடலுக்குள் கரைந்து பெரிய அளவில் கலோரி ஒன்றிணைந்து

முஹர்ரம் மாதமும் ஆஷுராவும்!

காலங்களைப் படைத்த கருணையாளனாகிய அல்லாஹ் தன் இறுதித் திருமறையில் கூறுகின்றான்... 

வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. இதுவே நேரான வழி.(புனிதமான)அம்மாதங்களில் உங்களுக்கு நீங்கள் தீங்கிழைத்து விடாதீர்கள்! [அல்குர்ஆன் 9:36]

இறைவனால் புனிதமாக்கப்பட்ட நான்கு மாதங்களில் ஒன்றுதான் முஹர்ரம் மாதமாகும். இதை அல்லாஹ்வின் மாதமென்றும் நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். இம்மாதத்திற்கென்று பல சிறப்புகளை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியிருந்த போதிலும், நபியவர்கள் காட்டித்தராத, மார்க்கத்திற்கு விரோதமான பல்வேறு மூடநம்பிக்கைகள் இம்மாதத்தில் இஸ்லாமியர் களுக்கு மத்தியில் நிறைந்து காணப்படுகின்றன. இந்தக் காரியங்களெல்லாம் நம்மை நரகப்படுகுழியில் தள்ளிவிடக்கூடியவை என்பதை அறியாமல் இன்றும் அதிகமான இஸ்லாமியர்கள் முஹர்ரம் மாதத்தின் பெயரால் பல பாவமான காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்... 
வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பி விட்டது. வருடம் என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக்கூடியவை. அவை: துல்கஅதா, துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜமாதுல்ஆகிர் மாதத்திற்கும் ஷஅபான் மாதத்திற்கும் இடையிலுள்ள ரஜப் மாதமாகும் அறிவிப்பவர்: அபூபக்ரா(ரலி) ஆதாரம் : புகாரி 3197

பஞ்சா எடுப்பது
இந்த புனிதமிக்க முஹர்ரம் மாதத்தில் பல ஊர்களில் பஞ்சா என்ற பெயரில்

நவம்பர் 02, 2013

ஆன்-லைனில் மாணவர்களின் விவரம்:பதிவேற்றும் பணி 80 சதவீதம் முடிவு!

கடலூர்:கடலூர் மாவட்டத்தில் அரசு, தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் விவரங்கள் ஆன்-லைனில் பதிவேற்றம் செய்யும் பணிகள் 80 சதவீதம் முடிந்துள்ளது.

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி., முதல், பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவிகளின் பெயர், பெற்றோர் பெயர், முகவரி, ரத்த வகை, பயிலும் பாடப்பிரிவு உள்ளிட்ட விவரங்களை ஆன்-லைனில் பதிவு செய்யுமாறு தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது. தேர்வு நேரங்களின் போது, ஏற்படும் சில குளறுபடிகளை தவிர்க்கும் வகையில் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள, பள்ளிகளில் மாணவர்களின் விவரங்கள் அனைத்தும் ஆன்-லைனில் பதிவேற்றும் செய்யும் பணி தீவிரமாக நடந்து